பதிவு செய்த நாள்
17 டிச2016
01:23
மும்பை:டாடா சன்ஸ் நிறுவனத்தின் இடைக்கால தலைவர், ரத்தன் டாடா வெளியிட்டுள்ள அறிக்கை:டாடா டிரஸ்ட் நிறுவனத்தில் இருந்து, நான் விலக உள்ளதாகவும், வெளியார் நிறுவனம் மூலம், புதிய தலைவரை தேர்வு செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும், ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
டாடா டிரஸ்ட், நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களில், என் பங்களிப்பு தொடரும். தலைமை பொறுப்பில் மாற்றம் என்பது, உரிய நேரத்தில் சுமுகமான முறையில் நடைபெறும்.இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
டாடா டிரஸ்ட் நிறுவன உறுப்பினரான, கிருஷ்ணகுமார், நேற்று முன்தினம் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், டாடா டிரஸ்ட் நிறுவனத்திற்கு புதிய தலைவரை நியமிக்க உள்ளதாகவும், அது தொடர்பாக, ஆலோசனை நிறுவனம் ஒன்றின் உதவியை நாட முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|