‘வெள்ளம், புயல் வந்­தாலும் தமி­ழ­கத்தில் உற்­பத்தி தொடரும்’‘வெள்ளம், புயல் வந்­தாலும் தமி­ழ­கத்தில் உற்­பத்தி தொடரும்’ ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு ...
இந்­தி­யாவில் முத­லீடு செய்ய சிங்­கப்­பூ­ருக்கு அழைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2016
01:27

சிங்­கப்பூர்:இந்­தி­யாவில் உள்ள ஏரா­ள­மான முத­லீட்டு வாய்ப்­பு­களை, சிங்­கப்பூர் தொழி­ல­தி­பர்கள் பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும் என, பி.எச்.டி., வர்த்­தகம் மற்றும் தொழில் கூட்­ட­மைப்பு தலைவர், கோபல் ஜிவ­ரஜ்கா வலி­யு­றுத்தி உள்ளார்.
அவர், இந்­தியா – சிங்­கப்பூர் முத­லீட்டு மாநாட்டில், மேலும் பேசி­ய­தா­வது:மத்­திய அரசு, இந்­தி­யாவில் சுல­ப­மாக தொழில் துவங்­கு­வ­தற்கு, தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளுக்கும் முன்­னு­ரிமை அளித்து வரு­கி­றது. இந்­தியா, மிக அதிக மக்கள் தொகை உள்ள நாடு என்­பதால், நுகர்வோர் தேவை, அதி­க­மாக உள்­ளது. இது, ஏரா­ள­மான முத­லீட்டு வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்தி உள்­ளது. அதனால், குறிப்­பாக, அடிப்­படை கட்­ட­மைப்பு துறை­களில், எவ்­வித ஐயமும் இன்றி, தாரா­ள­மாக முத­லீடு செய்­யலாம்.
சர்­வ­தேச பொரு­ளா­தா­ரத்தில், தவிர்க்க முடி­யாத மைய­மாக, இந்­தி­யாவை நிலை நிறுத்த, அரசு முயன்று வரு­கி­றது. அத்­த­கைய முயற்­சி­களில் ஒன்­றான, சரக்கு மற்றும் சேவை வரி, 2017 ஏப்­ரலில் அம­லுக்கு வர உள்­ளது. இதன் மூலம், நாடு முழு­வதும், நிலை­யான, நடுத்­த­ர­மான வரி­வி­திப்பு முறை, நடை­மு­றைக்கு வரும்.இந்­தி­யாவில், தனியார் முத­லீ­டுகள் தொடர்­பான, வர்த்­தகம் சார்ந்த பிரச்­னை­க­ளுக்கு தீர்வு காணும் பணியை, கூட்­ட­மைப்பு மேற்­கொண்டு வரு­கி­றது.
சிங்­கப்பூர் மற்றும் தென்­கி­ழக்கு ஆசிய பிராந்­தி­யத்தைச் சேர்ந்த நிறு­வ­னங்கள், இந்­திய நிறு­வ­னங்­க­ளுடன் இணைந்து வர்த்­தகம் மேற்­கொள்ள வேண்டும். அத்­த­கைய தகு­தி­யுள்ள இந்­திய நிறு­வ­னங்­களை கண்­ட­றிந்து, முத­லீட்டு வாய்ப்­புகள் குறித்த விப­ரங்­களை, சிங்­கப்பூர் நிறு­வ­னங்­க­ளுக்கு, கூட்­ட­மைப்பு வழங்கும்.இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)