பதிவு செய்த நாள்
17 டிச2016
01:27
சிங்கப்பூர்:இந்தியாவில் உள்ள ஏராளமான முதலீட்டு வாய்ப்புகளை, சிங்கப்பூர் தொழிலதிபர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, பி.எச்.டி., வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு தலைவர், கோபல் ஜிவரஜ்கா வலியுறுத்தி உள்ளார்.
அவர், இந்தியா – சிங்கப்பூர் முதலீட்டு மாநாட்டில், மேலும் பேசியதாவது:மத்திய அரசு, இந்தியாவில் சுலபமாக தொழில் துவங்குவதற்கு, தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் முன்னுரிமை அளித்து வருகிறது. இந்தியா, மிக அதிக மக்கள் தொகை உள்ள நாடு என்பதால், நுகர்வோர் தேவை, அதிகமாக உள்ளது. இது, ஏராளமான முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அதனால், குறிப்பாக, அடிப்படை கட்டமைப்பு துறைகளில், எவ்வித ஐயமும் இன்றி, தாராளமாக முதலீடு செய்யலாம்.
சர்வதேச பொருளாதாரத்தில், தவிர்க்க முடியாத மையமாக, இந்தியாவை நிலை நிறுத்த, அரசு முயன்று வருகிறது. அத்தகைய முயற்சிகளில் ஒன்றான, சரக்கு மற்றும் சேவை வரி, 2017 ஏப்ரலில் அமலுக்கு வர உள்ளது. இதன் மூலம், நாடு முழுவதும், நிலையான, நடுத்தரமான வரிவிதிப்பு முறை, நடைமுறைக்கு வரும்.இந்தியாவில், தனியார் முதலீடுகள் தொடர்பான, வர்த்தகம் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் பணியை, கூட்டமைப்பு மேற்கொண்டு வருகிறது.
சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தைச் சேர்ந்த நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களுடன் இணைந்து வர்த்தகம் மேற்கொள்ள வேண்டும். அத்தகைய தகுதியுள்ள இந்திய நிறுவனங்களை கண்டறிந்து, முதலீட்டு வாய்ப்புகள் குறித்த விபரங்களை, சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு, கூட்டமைப்பு வழங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|