பதிவு செய்த நாள்
18 டிச2016
02:29
புதுடில்லி:மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்கரி கூறியதாவது:நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, 3 சதவீதம் உயர்த்துவதற்கான ஆற்றல், அடிப்படை கட்டமைப்பு துறைக்கு உள்ளது. இதை எட்ட, மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.
அடிப்படை கட்டமைப்பு துறை, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமின்றி, நாட்டின் வளர்ச்சிக்கான முக்கிய காரணியாகவும் திகழ்கிறது. தற்போது, நிலம் கையகப்படுத்துவதில் உள்ள நடைமுறைகள் சுலபமாக்கப்பட்டு உள்ளன. பல்வேறு திட்டங்கள் தொடர்பாக, அரசு துறைகளுக்கு இடையே, ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், திட்டங்களுக்கு விரைவாக அனுமதி பெற முடிகிறது. அனுமதி பெற்ற உடனே, திட்டப் பணிகளை துவக்குவதால், செலவினம் குறைகிறது.
இந்த நடைமுறையால், மீண்டும் சாலை போக்குவரத்தில், தனியார் முதலீடுகள் அதிகரித்துள்ளன. தினமும், 40 கி.மீ., சாலைகள் போடப்படுகின்றன. 14 விரைவு நெடுஞ்சாலைகளின் பணி நடைபெற்று வருகிறது. இத்துடன், நீர்வழிப் போக்குவரத்தும் முழு வீச்சில் நடந்தால், நாட்டின் பொருளாதாரம், 2 – 3 சதவீதம் வளர்ச்சி காணும். இந்தாண்டு, 12 முக்கிய துறைமுகங்கள், 6,000 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளன. இதை, 7,000 கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|