பதிவு செய்த நாள்
18 டிச2016
02:38
புதுடில்லி;இந்தாண்டு, மத்திய, மாநில அரசு துறைகளில், 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, மின்னணு முறையில் பரிவர்த்தனை நடைபெற்று உள்ளது என, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலர், அருணா சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:மத்திய அரசு, அனைத்து அரசு துறைகளிலும் மின்னணு சார்ந்த நடைமுறைகளை செயல்படுத்துவதில் தீவிரமாக உள்ளது. அது போல, மக்களும், பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட, அனைத்து சேவைகளையும் மின்னணு முறையில் பெற வேண்டும் என, அரசு வலியுறுத்தி வருகிறது.
இதற்கு, அரசு துறைகள் அனைத்திலும், மின்னணு நிர்வாகச் சேவைகளை விரிவுபடுத்த வேண்டியது அவசியம்; அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக, அரசு துறைகளில், இந்தாண்டு, விவசாயம், ஆரோக்கிய பராமரிப்பு, தொலை தொடர்பு, போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில், மின்னணு சார்ந்த செயல்பாடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிமாற்றம், 33 சதவீதம் அதிகரித்து, 1,000 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
கடந்த, 2015 மற்றும் 2014ம் ஆண்டு களில், மின்னணு சார்ந்த பரிவர்த்தனைகளின் மதிப்பு, முறையே, 760 கோடி ரூபாய் மற்றும் 350 கோடி ரூபாயாக இருந்தது. இந்தாண்டு, மின்னணு பரிவர்த்தனையில், முதல் ஐந்து இடங்களை, தெலுங்கானா, குஜராத், கேரளா, ஆந்திரா, தமிழகம் ஆகிய மாநிலங்கள் பிடித்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|