ஏற்­று­மதி: 17,492 கோடி டால­ராக உயர்வு ஏற்­று­மதி: 17,492 கோடி டால­ராக உயர்வு ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.73 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.73 ...
உணவு பொருட்கள் ‘பேக்­கேஜிங்’:நுகர்வோர் ஏமா­றாமல் இருக்கவிரைவில் புதிய விதி­மு­றைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2016
02:45

புது­டில்லி;உணவு பொருட்கள் அடைக்­கப்­பட்ட அட்­டையில் அச்­சி­டப்­படும், உண்­மைக்கு மாறான விப­ரங்­களால், நுகர்வோர் ஏமா­று­வதை தடுக்க, விரைவில் கடு­மை­யான விதி­மு­றைகள் அம­லுக்கு வர உள்­ளன.
இது குறித்து, டில்­லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்­கேற்ற, உணவு பாது­காப்பு மற்றும் தரம் ஆணை­யத்தின் தலைமை செயல் அதி­காரி, பவன் குமார் அகர்வால் கூறி­ய­தா­வது:உணவு பொருட்கள் தயா­ரிப்பில் ஈடு­பட்டு வரும் நிறு­வ­னங்கள், உணவு பொருட்­களின் விப­ரங்கள், தயா­ரிப்பு மற்றும் காலா­வதி தேதி, அதி­க­பட்ச விற்­பனை விலை உள்­ளிட்ட விப­ரங்­களை, அட்­டையில் அச்­சிட வேண்டும். அது­போல, உணவு பொருட்­களின், ‘பேக்கிங்’ தொடர்­பான விதி­மு­றை­க­ளையும் பின்­பற்ற வேண்டும்.
சமையல் எண்ணெய்
இந்­நி­லையில், நுகர்­வோ­ரிடம், உணவு பொருட்கள் குறித்து அதிக விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தவும், அவர்கள், தவ­றான விப­ரங்­களை நம்பி ஏமா­று­வதை தடுக்­கவும், தற்­போ­தைய விதி­மு­றை­களை மேலும் கடு­மை­யாக்க முடிவு செய்­யப்­பட்டு உள்­ளது. இதை­ய­டுத்து, நவீ­ன­மான, மேம்­ப­டுத்­தப்­பட்ட, உணவு பொருட்கள் பேக்­கேஜிங் விதி­மு­றைகள் விரைவில் அம­லுக்கு வர உள்­ளன. சமையல் எண்ணெய் பாக்­கெட்­டுகள் மற்றும் டின்­களில், எண்­ணெயில் உள்ள இரு வகை கொழுப்பின் விப­ரங்­களை அச்­சிட வேண்டும் என, உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­கான கெடு, பிப்­ர­வ­ரி­யுடன் முடி­வ­டை­கி­றது.
மார்ச் முதல், அனைத்து சமையல் எண்ணெய் பாக்­கெட்­டு­க­ளிலும், கொழுப்பு வகை­களின் அளவு குறித்த விப­ரங்கள், கண்­டிப்­பாக இடம் பெற வேண்டும். நுகர்­வோரை தவ­றாக வழி நடத்தும் விளம்­ப­ரங்­களை வெளி­யிட்ட குற்­றச்­சாட்டின் பேரில், ஆறு நிறு­வ­னங்கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. சில நிறு­வ­னங்கள், உணவு பொருட்­களின் விற்­ப­னைக்­காக, தவ­றான விப­ரங்­களை வெளி­யிடு­ கின்­றன. அத்­த­கைய உணவு பொருட்­களை ஆய்வு செய்து, அந்த விப­ரங்கள் உண்­மை­யா­னது தானா என்­பதை கண்­டு­பி­டிப்­ப­தற்­கான அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்த முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.
தெருவோர உணவகம்
உணவு பொருட்­களை தயா­ரிக்கும் நிறு­வ­னங்கள், தாங்கள் தெரி­விக்கும் விப­ரங்­க­ளுக்கு, தகுந்த ஆதா­ரங்­களை அளிக்க வேண்டும். இதற்கு, புதிய விதி­முறை வழி வகுக்கும்.சமீ­பத்தில், அதிக சக்தி தரும் பானங்­க­ளுக்­கான தர நிர்­ணய விதி­மு­றைகள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.
தெரு­வோர உண­வ­கங்­களில், செய்­தித்­தாள்­களில் உண­வுகள் பொட்­டலம் கட்டி கொடுக்­கப்­ப­டு­கின்­றன. செய்­தித்­தாளில் உள்ள அச்சு மை, உண­வுடன் கலப்­பதால், அவற்றை உண்­போ­ருக்கு உடல் நலக் கோளாறு ஏற்­ப­டு­கி­றது. எனவே, இத்­த­கைய போக்கை தடுக்க, தகுந்த நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு, அனைத்து மாநில அர­சு­க­ளையும் அறி­வு­றுத்தி உள்ளோம். இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)