பதிவு செய்த நாள்
25 டிச2016
23:37
ஸ்மார்ட்போன் மூலம் வங்கி கணக்கில் இருந்து பணம் அனுப்ப வழி செய்யும் யு.பி.ஐ., செயலி மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனை எண்ணிக்கை அதிகரித்துள்ளது.தேசிய பேமென்ட்ஸ் கார்ப்பரேஷனால் உருவாக்கப்பட்ட யு.பி.ஐ., பண பரிவர்த்தனை செய்யும் செயலியை முன்னணி வங்கிகள் வழங்கி வருகின்றன. அண்மையில் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட மேலும் பல வங்கிகள் இந்த சேவையை வழங்கத் துவங்கியுள்ளன. மொத்தம், 32 வங்கிகள் இந்த சேவையை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், யு.பி.ஐ., மூலமான பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல் படி, யு.பி.ஐ., மூலம் நவம்பர் மாதம் 2,87,000 பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், டிசம்பர் மாதம் முதல் பாதியில் இது, 7,19,000 ஆக உயர்ந்துள்ளது. இதே போல பண பரிவர்த்தனையின் மதிப்பும் இந்த காலத்தில் 90.5 கோடி ரூபாயில் இருந்து 220.9 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.யு.பி.ஐ., செயலியில் இணையும் வங்கிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் இந்த செயலியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது இதற்கு காரணமாக கருதப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|