பதிவு செய்த நாள்
26 டிச2016
23:38
புதுடில்லி : மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது: பிரதமர் மோடி, ௨௫ம் தேதி, வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையில், பங்கு பரிவர்த்தனை சார்ந்த வருவாய்க்கு, நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிக்கப்படும் என, கூறவில்லை. ஆனால், சில ஊடகங்கள், அவரது பேச்சை தவறாக புரிந்து கொண்டு, மொழியாக்கம் செய்துள்ளன. அதனால், பங்குச்சந்தை வட்டாரங்களில், நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கு வரி விதிக்கப்படும் என, ஆதாரப்பூர்வமற்ற தகவல்கள் உலவத் துவங்கியுள்ளன. இது, முதலீட்டாளர்கள்இடையே அச்சத்தை ஏற்படுத்துவது போல் உள்ளது.பிரதமர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, அந்த வரிவிதிப்பு பற்றி கூறவில்லை என, நான் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். பங்கு பரிவர்த்தனையில் ஈட்டப்படும் வருவாய்க்கு, நீண்ட கால அடிப்படையில், மூலதன ஆதாய வரி விதிக்கும் திட்டம் எதுவும், மத்திய அரசுக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|