பதிவு செய்த நாள்
27 டிச2016
17:07
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த பல நாட்களாகவே மந்தமாக, சரிவுடன் முடிந்த நிலையில் மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்கு அதிக ஏற்றத்துடன் முடிந்தன. இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே சென்செக்ஸ் 81 புள்ளிகளும், நிப்டி 21 புள்ளிகளும் உயர்வுடன் ஆரம்பமாகின. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், முன்னணி நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் வாங்க தொடங்கியது போன்ற காரணங்களால் பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருந்தன. மேலும் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக சர்வதேச வரிவிகித முறையை கொண்டு வருவது பற்றி நிதியமைச்சர் அருண் ஜெட்லி கோடிட்டு காட்டியிருந்தார். இதன் காரணமாகவும் இன்றைய வர்த்தகம் மேலும் உயர்வை கண்டதோடு மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்கு ஏற்றத்தையும் கண்டன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 406.34 புள்ளிகள் உயர்ந்து 26,213.44-ஆகவும், நிப்டி 124.60 புள்ளிகள் உயர்ந்து 8,032.85-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 29 நிறுவன பங்குகள் உயர்வுடனும், ஒரே ஒரு நிறுவன பங்குகுள் சரிந்தும் முடிந்தன. இன்றைய வர்த்தகத்தில் ஐடிசி., டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், ஐசிஐசிஐ., எஸ்பிஐ., எப்எம்சிஜி, மருத்துவம் மற்றும் நுகர்பொருள் தொடர்பான பங்குகள் அதிக உயர்வை சந்தித்தன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|