பதிவு செய்த நாள்
03 ஜன2017
23:59
புதுடில்லி : ஓட்டல்களில் பரிமாறப்படும் உணவு வகைகளுக்கு, சேவை கட்டணம் செலுத்த வேண்டும் என்பது கட்டாயம் அல்ல; சேவையில் குறைபாடு உள்ளதாக ஒருவர் கருதினால், சேவை கட்டணத்தை செலுத்த தேவையில்லை என, மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம், நேற்று முன்தினம் அறிவித்தது. இந்த அறிவிப்பை, உணவு உண்ண வருவோரின் கண்களில் படும்படி, ஓட்டல்களில் வைக்க வேண்டும் எனவும், அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
இது குறித்து, இந்திய ஓட்டல் மற்றும் ரெஸ்டாரென்ட் கூட்டமைப்பின் தலைவர், பிரதீப் ஷெட்டி கூறியதாவது: அரசின் இந்த அறிவிப்பு, குழப்பமாக உள்ளது. இதனால், சாப்பிட வருவோருக்கும், ஓட்டல் நிர்வாகத்திற்கும் இடையே சண்டை மூளும். சேவைக் கட்டணம், தனி என்பது குறித்த அறிவிப்பு பலகையை, ஓட்டலில், பெரிதாக மாட்டி வைக்க வேண்டும் என, உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளோம். இந்த பிரச்னை குறித்து, விரைவில், அரசிடம் நேரடியாக முறையிட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|