பதிவு செய்த நாள்
09 ஜன2017
23:26
ஆமதாபாத் : ஓட்டல், உணவுப் பொருள் உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டு வரும், ஐ.டி.சி., நிறுவனம், குஜராத் தலைநகர், ஆமதாபாத்தில், 600 கோடி ரூபாய் முதலீட்டில், சூப்பர் பிரீமியம் 5 ஸ்டார் ஓட்டலை, ‘ஐ.டி.சி., நர்மதா’ என்ற பெயரில் துவக்க திட்டமிட்டு உள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கூறுகையில், ‘‘மழை பற்றாக்குறை மாநிலமாக இருந்தும், நர்மதா நதி மூலம், குஜராத், மிகப்பெரிய வளர்ச்சியடைந்து உள்ளது. நர்மதா நதி பெயரை, ஐ.டி.சி., தேர்வு செய்ததற்கு, நன்றியை தெரிவித்து கொள்கிறேன்,’’ என்றார்.
ஐ.டி.சி., நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, சஞ்சீவ் பூரி கூறியதாவது:ஓட்டல், 6 லட்சம் சதுர அடி பரப்பில், 300 அறைகளுடன், மாநிலத்தில், மிகப்பெரிய பிரீமியம் ஓட்டலாக இருக்கும். ஐ.டி.சி., பிராண்டின் கீழ், ஏற்கனவே, வெல்கம் ஹெரிடேஜ், பார்ச்சூன் உள்ளிட்ட, எட்டு ஓட்டல்கள் உள்ளன. மேலும், பார்ச்சூன் பிராண்டின் கீழ், வதோதராவில், மற்றொரு ஓட்டலை அமைக்க திட்டமிட்டு உள்ளோம். இதன் மூலம், குஜராத்தில், நிறுவனத்திற்கு சொந்தமான ஓட்டல்களின் எண்ணிக்கை, 10 ஆக உயரும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|