பதிவு செய்த நாள்
13 ஜன2017
00:31
புதுடில்லி : இந்தியர்கள், வலைதளங்கள் மூலம் பொருட்கள் வாங்குவது, ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதாக, ‘பேபால்’ நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த, 2016ல், இந்தியாவில், 4,92,500 கோடி ரூபாய்க்கு வலைதளங்களில் பொருட்கள் வாங்க, செலவிடப்பட்டுள்ளது. இது, 2018ல், 8,75,600 கோடி ரூபாயாக உயரும். வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் வாங்க, கடந்த ஆண்டு, 58,370 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அதில், ஆயத்த ஆடைகள், காலணி உள்ளிட்டவற்றை, 54 சதவீதத்திற்கும் அதிகமானோர் வாங்கியுள்ளனர். கடந்த ஆண்டு, நுகர்வோர் சாதனங்கள், அழகு சாதனப் பொருட்கள் ஆகியவற்றை, முறையே, 43 சதவீதம் மற்றும் 42 சதவீதம் பேர், வலைதளம் மூலம் வாங்கியுள்ளனர்.
இலவச டெலிவரி, உள்நாட்டு கரன்சியில் பணம் செலுத்தும் வசதி போன்றவற்றால், வெளிநாட்டு பொருட்களை வலைதளம் மூலம் மக்கள் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.இந்தியர்கள் வாங்கும் அயல்நாட்டு பொருட்களில், அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்த இடங்களில், பிரிட்டன், சீனா ஆகியவை உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|