பதிவு செய்த நாள்
16 ஜன2017
23:41
மும்பை : ‘வெளிநாட்டு நிறுவனங்கள் சார்பாக, இந்தியாவில் பணியாற்ற வருவோர், இங்கு தொழில் துவங்க ஆர்வமாக உள்ளனர்; இத்தகையோர், ஆசிய – பசிபிக் பிராந்தியத்திலேயே, இந்தியாவில் தான் அதிகம் உள்ளனர்’ என, எச்.எஸ்.பி.சி., ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விபரம்: தாய் நாட்டு நிறுவனம் சார்பாக, பிற நாடுகளுக்குச் சென்று பணியாற்றி வரும், 26,871 பேரிடம், கடந்த ஆண்டு, ஏப்., – மே மாதங்களில், ஆன்லைன் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. நுாற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இந்தியாவில் வர்த்தகம் துவங்க, 10 பேருக்கு ஒருவர் வீதம் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது, ஆசிய – பசிபிக் பிராந்தியத்தின் சராசரியான, ஐந்து பேரை விட, இரு மடங்கு அதிகம். பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட, மத்திய கிழக்கு நாடுகளை விடவும், இந்தியாவில் தொழில் துவங்க, அதிகமானோர் ஆர்வமாக உள்ளனர். மூன்றில் இரண்டு பங்கினர், இந்திய பொருளாதாரத்தின் மீது, அதிக நம்பிக்கை உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
ஆய்வில் பங்கேற்ற, இந்தியாவில் உள்ள வெளிநாட்டு பணியாளர்களில், 53 சதவீதத்தினர், நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை உறுதியாக இருக்கும் என, கூறியுள்ளனர். இதர, ஆசிய – பசிபிக் நாடுகளை விட, இந்தியாவில் அதிகம் சேமிக்க முடிவதாக, 44 சதவீதத்தினரும், நீண்ட கால சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கு ஏற்றதாக உள்ளது என, 39 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். இந்தியாவில் பணியாற்றும், வெளிநாட்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர், சராசரியாக, ஆண்டுக்கு, 1,45,057 டாலர் வருவாய் ஈட்டுகிறார்; இது, சர்வதேச சராசரியான, 97,419 டாலரை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளவில், மிகச் சிறந்த வெளிநாட்டு பணியிடம் குறித்த கேள்விக்கு, ஐரோப்பாவைச் சேர்ந்த சுவிட்சர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளை, பெரும்பான்மையானோர் தேர்வு செய்துள்ளனர். சிறந்த பணிச் சூழல் உள்ள, ஸ்வீடன், நார்வே, ஆஸ்திரியா, பிரிட்டன் உள்ளிட்ட, 10 நாடுகளில் பணியாற்ற, பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|