பதிவு செய்த நாள்
16 ஜன2017
23:40
மும்பை : இந்துஸ்தான் கோககோலா நிறுவனம், 1,000 கோடி ரூபாய் முதலீட்டில், இரு புதிய தொழிற்சாலைகளை அமைக்க உள்ளது.
இந்தியாவில், கோககோலாவின் துணை நிறுவனமான, இந்துஸ்தான் கோககோலா பிவரேஜஸ், பாட்டில் நிரப்பும் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கு, 26 இடங்களில், பாட்டில் நிரப்பும் ஆலைகள் உள்ளன. கோககோலா நிறுவனத்தின், 65 சதவீத பாட்டில்கள் தேவை, அந்த ஆலைகளின் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், இந்துஸ்தான் கோககோலா, குஜராத் மாநிலம், ஆமதாபாத்; ஆந்திர மாநிலம், நெல்லுார் ஆகிய இடங்களில், 1,000 கோடி ரூபாய் முதலீட்டில், தொழிற்சாலைகளை அமைக்க உள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி கிருஷ்ணகுமார் கூறியதாவது: எங்கள் நிறுவனம், ம.பி., மாநிலம், ஹாசாங்பாத் நகரில், ஏற்கனவே, 750 கோடி ரூபாய் முதலீட்டில், பாட்டில் நிரப்பும் ஆலை ஒன்றை அமைக்கும் பணியில் இருக்கிறது. இது, 2018ல் செயல்பாட்டுக்கு வரும். தற்போது, ஆமதாபாத், நெல்லுாரிலும் ஆலைகளை அமைக்க உள்ளது. இவற்றின் மூலம், கோககோலா நிறுவனத்தின் அனைத்து குளிர்பானங்களுக்கும் தேவையான பாட்டில்கள் நிரப்பும் பணி எளிதாகும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|