பதிவு செய்த நாள்
24 ஜன2017
23:54
புதுடில்லி : எச்.சி.எல்., டெக்னாலஜிஸ் நிறுவனம், 2016 டிச., மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், 2,070 கோடி ரூபாயை, ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 1,920 கோடி ரூபாயாக குறைந்திருந்தது.
இதே காலத்தில், அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய், 14.2 சதவீதம் உயர்ந்து, 10 ஆயிரத்து, 341 கோடி ரூபாயில் இருந்து, 11 ஆயிரத்து, 814 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது குறித்து, எச்.சி.எல்., நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் நிறுவனம், வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில், தரமான சேவைகளை வழங்குகிறது. இதனால், நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பாக உள்ளதால், வருவாய், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு, டிச., நிலவரப்படி, எங்கள் நிறுவனத்தின் பணியாளர்கள் எண்ணிக்கை, 1.11 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், கூடுதலாக, 8,467 பணியாளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|