பதிவு செய்த நாள்
24 ஜன2017
23:56
ஐதராபாத் : இந்திய நில அளவை அமைப்பின் தலைவர், சுவர்ண சுப்பாராவ் பேசியதாவது: இந்திய நில அளவை அமைப்பு உருவாகி, 250 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. காகிதங்களில் வெளியிடப்பட்ட நில அளவை மற்றும் தேசிய வரைபடங்கள், தற்போது, ‘டிஜிட்டல்’ முறையில், மிகத் தெளிவான படங்கள், துல்லியமான விபரங்களுடன் கிடைக்கின்றன.
செயற்கைக்கோள் உதவியுடன் இயற்கை வளங்கள், நீராதாரங்கள் உள்ளிட்டவற்றை படம் பிடித்து ஆய்வு செய்ய, புவிசார் தொழில்நுட்பம் உதவுகிறது.இத்தொழில்நுட்பத்தில் பெறப்படும் வரைபடங்கள், நுணுக்கமான புள்ளி விபரங்களின் அடிப்படையில், நகர்ப்புறங்களை கட்டமைப்பது, அணை கட்டுவது போன்ற எண்ணற்ற பணிகளை மேற்கொள்ளலாம்.இவ்வகைச் சேவைகளை, மத்திய, மாநில அரசுகளுக்கு, இந்திய நில அளவை அமைப்பு வழங்கி வருகிறது.
இந்தியாவில், புவிசார் ஆய்வு படங்கள் மற்றும் புள்ளி விபரங்களை வழங்கும் சந்தையின் மதிப்பு, அடுத்த, 10 ஆண்டுகளில், 1 லட்சம் கோடி ரூபாயாக உயரும். பொது மற்றும் தனியார் துறையில், புவிசார் படங்கள் பிரிவில், வர்த்தக வாய்ப்பு அதிகம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|