பதிவு செய்த நாள்
25 ஜன2017
23:32
சென்னை : முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த, டி.ஐ., சைக்கிள் நிறுவனம், நடப்பாண்டுக்கான, புதிய சைக்கிள்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைவர் அருண் அழகப்பன் கூறியதாவது: நாளைய தலைமுறையினரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், புதிய சைக்கிள்களை வடிவமைப்பதில், முன்னணியில் உள்ளோம். சிறுவர், சிறுமியர், மாணவர்கள், இளைஞர்களுக்கு ஏற்றவாறு, பல புதிய சிறப்பம்சங்களுடன் கூடிய நவீன சைக்கிள்களை, அறிமுகப்படுத்தி உள்ளோம்.கடந்த ஆண்டு, பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள, ராஜ்புராவில், நவீன தொழில்நுட்ப தொழிற்சாலை துவங்கப்பட்டது. நிறுவனம், டிராக் மற்றும் டிரையல் பிராண்டின் கீழ், சைக்கிள் விற்பனையை, நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் மேற்கொள்கிறது.
மேலும், சிறப்பு வகை சைக்கிள்களின் விற்பனையை வலுப்படுத்த, ‘பீரிமியம் சைக்கிள்ஸ் குரூப்’ எனும் அமைப்பை துவங்கி உள்ளோம். சர்வதேச நடைமுறையை பின்பற்றி, மார்ச் – ஜூன் மாதங்களுக்கு முன்பாகவே, தற்போது, புதிய சைக்கிள்களை அறிமுகப்படுத்தி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|