பதிவு செய்த நாள்
02 பிப்2017
09:55
மும்பை : தொடர்ந்து 7 வது நாளாக சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்து காணப்படுகிறது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள், அமெரிக்க டாலரை அதிகம் விற்றதன் காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்து காணப்படுகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (பிப்ரவரி 2, காலை 9 மணி நிலவரம்) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்ப 5 காசுகள் உயர்ந்து 67.42 ஆக உள்ளது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 67.47 ஆக இருந்தது.
உலகின் மற்ற நாடுகளின் நாணய மதிப்பிற்கு எதிராகவும் டாலரின் மதிப்பு குறைந்துள்ளது. இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கிய போதிலும், ரூபாய் மதிப்பு தொடர்ந்து உயர்வடைந்து காணப்படுவது முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|