பதிவு செய்த நாள்
03 பிப்2017
23:51
புதுடில்லி : அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் அதன் ‘ஐ போன்’ தொழிற்சாலையை, பெங்களூரில் அமைக்க முடிவு செய்து உள்ளது.
இது குறித்து, அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆப்பிள் நிறுவனம், பெங்களூரில் ஐ போன் தொழிற்சாலையை, வரும் ஏப்ரலில் துவக்க உள்ளது. தைவானைச் சேர்ந்த, விஸ்ட்ரான் நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்திற்கு மொபைல் போன் உபகரணங்களை தயாரித்து அளித்து வருகிறது. இந்நிறுவனத்திற்கு, பெங்களூரு புறநகரான பீன்யாவில், தொழிற்சாலை உள்ளது. இங்கு, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் ஐ போன் உபகரணங்கள், அசெம்பிளிங் செய்யப்பட்டு, விற்பனைக்கு அனுப்பப்படும். இதையொட்டி, விஸ்ட்ரான், அசெம்பிளிங் பிரிவை அமைப்பதற்கான நடவடிக்கைகளை துவக்கியுள்ளது.
இது தொடர்பாக, விரைவில் ஆப்பிள் மற்றும் விஸ்ட்ரான் நிறுவனத்திற்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதையடுத்து, இந்தியாவின் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பு குறித்த, அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|