உணவு பொருட்கள் சில்லரை விற்பனை: அரசிடம் அனுமதி கேட்கும் அமேசான்உணவு பொருட்கள் சில்லரை விற்பனை: அரசிடம் அனுமதி கேட்கும் அமேசான் ... ‘விசைத்தறி துறைக்கு விரைவில் சாதகமான செய்தி ‘விசைத்தறி துறைக்கு விரைவில் சாதகமான செய்தி ...
மூலப்­பொ­ருட்­கள் விலை உயர்வு :காகித ஆலை­க­ளுக்கு நெருக்­கடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 பிப்
2017
04:39

மும்பை:மூலப்பொருட்கள் விலை உயர்வால், குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள காகித ஆலைகளுக்கு, கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில், காகித ஆலைகள் அதிகளவில் உள்ளன. கடந்த இரு மாதங்களாக, காகித உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், காகித ஆலைகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, குஜராத் காகித ஆலை கூட்டமைப்பின் தலைவர் சுனில் அகர்வால் கூறியதாவது:இந்தியா, சீனா ஆகியவை, மறுசுழற்சிக்கு, வெளிநாடுகளில் இருந்து உபயோகித்த காகிதங்களை, அதிகளவில் இறக்குமதி செய்கின்றன. இதற்காக, இரு நாடுகளும், மற்ற நாடுகளை தான் சார்ந்துள்ளன.
தற்போது, காகித உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை, 35 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால், காகித ஆலைகளுக்கு, ஒரு கிலோவுக்கு, ஆறு ரூபாய் வரை கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.
குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள காகித ஆலைகளின் ஆண்டு விற்றுமுதல், 12 ஆயிரம் கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. தற்போது, மூலப்பொருட்களின் விலை உயர்வால், இரு மாநிலங்களிலும் உள்ள, 125 காகித ஆலைகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சில ஆலைகள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)