பதிவு செய்த நாள்
05 பிப்2017
04:39
மும்பை:மூலப்பொருட்கள் விலை உயர்வால், குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள காகித ஆலைகளுக்கு, கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில், காகித ஆலைகள் அதிகளவில் உள்ளன. கடந்த இரு மாதங்களாக, காகித உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், காகித ஆலைகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, குஜராத் காகித ஆலை கூட்டமைப்பின் தலைவர் சுனில் அகர்வால் கூறியதாவது:இந்தியா, சீனா ஆகியவை, மறுசுழற்சிக்கு, வெளிநாடுகளில் இருந்து உபயோகித்த காகிதங்களை, அதிகளவில் இறக்குமதி செய்கின்றன. இதற்காக, இரு நாடுகளும், மற்ற நாடுகளை தான் சார்ந்துள்ளன.
தற்போது, காகித உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை, 35 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால், காகித ஆலைகளுக்கு, ஒரு கிலோவுக்கு, ஆறு ரூபாய் வரை கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.
குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள காகித ஆலைகளின் ஆண்டு விற்றுமுதல், 12 ஆயிரம் கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. தற்போது, மூலப்பொருட்களின் விலை உயர்வால், இரு மாநிலங்களிலும் உள்ள, 125 காகித ஆலைகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சில ஆலைகள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|