பதிவு செய்த நாள்
05 பிப்2017
04:36
புதுடில்லி:இணையதள வணிகம் வாயிலான உணவு பொருட்கள் சில்லரை விற்பனைக்கு அமேசான் நிறுவனம், மத்திய அரசிடம் அனுமதி கேட்க உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த அமேசான், இந்தியாவில், இணையதள வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் இணையதளம் வாயிலாக, எலக்ட்ரானிக், ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், அமேசான், இணையதளம் மூலமாக, உணவு பொருட்கள் சில்லரை விற்பனையில் ஈடுபட, மத்திய அரசிடம், அனுமதி கேட்க உள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசு, உணவு பதப்படுத்தும் துறையில், அன்னிய நேரடி முதலீட்டுக்கு, 100 சதவீதம் அனுமதி அளித்துள்ளது. அந்த துறையை ஊக்குவிக்க, பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. எங்கள் நிறுவனம், இந்தியாவில், 3,400 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
அந்த நிதியில், இந்தியாவில், இதற்கென தனியாக துணை நிறுவனம் ஒன்றை அமைக்க இருக்கிறது. அதன் மூலமாக உணவுப் பொருட்களை பாதுகாத்து, இணையதளம் வாயிலாக விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மத்திய அரசிடம், அனுமதி கோரப்பட இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|