தேசிய பங்கு சந்தையின் ஐ.பி.ஓ.,; கூடுதல் தகவல் கோருகிறது ‘செபி’தேசிய பங்கு சந்தையின் ஐ.பி.ஓ.,; கூடுதல் தகவல் கோருகிறது ‘செபி’ ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.31 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.31 ...
அனைத்து ஏற்றுமதி மேம்பாட்டு குழுக்களும் மின்னணு பண பரிவர்த்தனைக்கு மாற உத்தரவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 பிப்
2017
08:12



புதுடில்லி : ‘‘ரொக்க நடை­மு­றையை கைவிட்டு, மின்­னணு பணப் பரி­வர்த்­த­னைக்கு மாற, அனைத்து துறை­கள் சார்ந்த, ஏற்­று­மதி மேம்­பாட்டு குழுக்­க­ளுக்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்டு உள்­ளது,’’ என, மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் தெரி­வித்து உள்­ளார்.
இது குறித்து, லோக்­ச­பா­வில் அவர் மேலும் கூறி­ய­தா­வது:கடந்த ஆண்டு, நவம்­ப­ரில் மேற்­கொள்­ளப்­பட்ட, பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கை­யின் தாக்­கம் குறித்து, அனைத்து ஏற்­று­மதி மேம்­பாட்டு குழுக்­களின் கருத்­துக்­களை, வர்த்­த­கம் மற்­றும் குறு, சிறு, நடுத்­தர தொழில் துறை அமைச்­சக அதி­கா­ரி­கள் கேட்­ட­றிந்­த­னர். அத்­து­டன், தொழில் மற்­றும் வர்த்­த­கக் கூட்­ட­மைப்­பு­க­ளி­டம் இருந்­தும் ஆலோ­ச­னை­கள் பெறப்­பட்­டன.மாற வேண்டும்இதை­ய­டுத்து, பணத் தட்­டுப்­பாட்டை சமா­ளிக்க, அனைத்து ஏற்­று­மதி மேம்­பாட்டு குழுக்­களும், ரொக்­கப் பரி­மாற்­றத்தை கைவிட்டு, மின்­னணு பணப் பரி­வர்த்­த­னைக்கு மாற வேண்­டும் என, அறி­வு­றுத்­தப்­பட்­டது.அத்­து­டன், பணத் தட்­டுப்­பாட்டை சமா­ளிக்க, அரசு, மேலும் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்­தது.
கடன் உத்­த­ர­வாத நிதி அமைப்­பின் கீழ், குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்­கான கடன் உத்­த­ர­வாத வரம்பு, 1 கோடி ரூபா­யில் இருந்து, 2 கோடி ரூபா­யாக அதி­க­ரிக்­கப்­பட்டு உள்­ளது. மேலும், இத்­திட்­டத்­தின் கீழ், வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­களும், குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு உத்­த­ர­வாத கடன் வழங்க அனு­மதி அளிக்­கப்­பட்டு உள்­ளது.குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்­கான நடை­முறை மூல­த­னம் மற்­றும் ரொக்க கடன் வரம்பை உயர்த்­து­மாறு, அனைத்து வங்­கி­க­ளை­யும், நிதிச் சேவை­கள் துறை கேட்­டுக் கொண்­டுள்­ளது.
கோழி, முட்டைஇந்­தி­யா­வில், பற­வைக் காய்ச்­சல் அறி­கு­றி­கள் கார­ண­மாக, கோழி, முட்டை ஆகி­ய­வற்­றின் இறக்­கு­ம­திக்கு, சவுதி அரே­பியா, தற்­கா­லிக தடை விதித்­துள்­ளது. இது குறித்து, 2016 நவ., 26ல், சவுதி அரே­பியா, மத்­திய அர­சுக்கு தெரி­யப்­ப­டுத்தி உள்­ளது.மத்­திய அர­சி­டம், கோழிப் பண்ணை பொருட்­கள் ஏற்­று­ம­திக்­காக, பற­வைக் காய்ச்­ச­லற்ற மண்­ட­லங்­கள் அமைக்­கும் திட்­டம் எது­வு­மில்லை. அதே சம­யம், ஏற்­று­ம­திக்­கான, கோழி வளர்ப்பு மற்­றும் கோழி பண்­ணைப் பொருட்­கள் உற்­பத்தி மண்­ட­லங்­கள், சுகா­தா­ர­மான முறை­யில் உள்­ள­னவா என்­பதை, கால்­நடை, பண்ணை மற்­றும் மீன்­வ­ளத் துறை­கள் ஆய்வு செய்­கின்றன.பருப்பு வகை­களின் இறக்­கு­ம­தி­யில், தனி­யார் நிறு­வ­னங்­களின் ஒப்­பந்த மீறல், விலை குறைப்பு உள்­ளிட்­டவை தொடர்­பான புகார்­கள் எது­வும், அர­சின் கவ­னத்­திற்கு வர­வில்லை.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)