பதிவு செய்த நாள்
08 பிப்2017
08:12
புதுடில்லி : ‘‘ரொக்க நடைமுறையை கைவிட்டு, மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு மாற, அனைத்து துறைகள் சார்ந்த, ஏற்றுமதி மேம்பாட்டு குழுக்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து, லோக்சபாவில் அவர் மேலும் கூறியதாவது:கடந்த ஆண்டு, நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட, பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் தாக்கம் குறித்து, அனைத்து ஏற்றுமதி மேம்பாட்டு குழுக்களின் கருத்துக்களை, வர்த்தகம் மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சக அதிகாரிகள் கேட்டறிந்தனர். அத்துடன், தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்புகளிடம் இருந்தும் ஆலோசனைகள் பெறப்பட்டன.மாற வேண்டும்இதையடுத்து, பணத் தட்டுப்பாட்டை சமாளிக்க, அனைத்து ஏற்றுமதி மேம்பாட்டு குழுக்களும், ரொக்கப் பரிமாற்றத்தை கைவிட்டு, மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.அத்துடன், பணத் தட்டுப்பாட்டை சமாளிக்க, அரசு, மேலும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.
கடன் உத்தரவாத நிதி அமைப்பின் கீழ், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத வரம்பு, 1 கோடி ரூபாயில் இருந்து, 2 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ், வங்கி சாரா நிதி நிறுவனங்களும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உத்தரவாத கடன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான நடைமுறை மூலதனம் மற்றும் ரொக்க கடன் வரம்பை உயர்த்துமாறு, அனைத்து வங்கிகளையும், நிதிச் சேவைகள் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
கோழி, முட்டைஇந்தியாவில், பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் காரணமாக, கோழி, முட்டை ஆகியவற்றின் இறக்குமதிக்கு, சவுதி அரேபியா, தற்காலிக தடை விதித்துள்ளது. இது குறித்து, 2016 நவ., 26ல், சவுதி அரேபியா, மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி உள்ளது.மத்திய அரசிடம், கோழிப் பண்ணை பொருட்கள் ஏற்றுமதிக்காக, பறவைக் காய்ச்சலற்ற மண்டலங்கள் அமைக்கும் திட்டம் எதுவுமில்லை. அதே சமயம், ஏற்றுமதிக்கான, கோழி வளர்ப்பு மற்றும் கோழி பண்ணைப் பொருட்கள் உற்பத்தி மண்டலங்கள், சுகாதாரமான முறையில் உள்ளனவா என்பதை, கால்நடை, பண்ணை மற்றும் மீன்வளத் துறைகள் ஆய்வு செய்கின்றன.பருப்பு வகைகளின் இறக்குமதியில், தனியார் நிறுவனங்களின் ஒப்பந்த மீறல், விலை குறைப்பு உள்ளிட்டவை தொடர்பான புகார்கள் எதுவும், அரசின் கவனத்திற்கு வரவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|