தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 அதிகரிப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ.88 அதிகரிப்பு ... முதன்­மு­றை­யாக கடன் வாங்­கு­ப­வர்­க­ளுக்கு ஐ.டி.எப்.சி., வங்­கி­யின் புதிய வசதி முதன்­மு­றை­யாக கடன் வாங்­கு­ப­வர்­க­ளுக்கு ஐ.டி.எப்.சி., வங்­கி­யின் புதிய ... ...
இப்கோ தயா­ரிப்­பு­களை வாங்க விவ­சா­யி­க­ளுக்கு டெபிட் கார்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2017
00:50

புதுடில்லி : உரத்தொழிலில் முன்னணியில் இருக்கும், இப்கோ நிறுவனம், பேங்க் ஆப் பரோடாவுடன் இணைந்து, விவசாயிகளுக்காக தனியான, டெபிட் கார்டுகளை வழங்க இருக்கிறது.
கிராமப்புற விவசாயிகளும், ரொக்கமில்லா பண பரிவர்த்தனை முறைக்கு மாறுவதற்கு வசதியாக, இத்திட்டம் துவங்கப்படுகிறது. இதற்காக, இப்கோ என அழைக்கப்படும், இண்டியன் பார்மர்ஸ் பெர்டிலைசர் கோஆப்பரேட்டிவ் லிமிடெட், பேங்க் ஆப் பரோடாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.இதன் மூலம், இப்கோ நிறுவனத்தின் தயாரிப்புகளை குறைந்த வட்டியில் கடனாகவும் வாங்க முடியும்.
இது குறித்து இப்கோ அறிவித்துள்ளதாவது:பேங்க் ஆப் பரோடா, ஆதார் அடிப்படையிலான கணக்கை விவசாயிகளுக்கு ஏற்படுத்தி, டெபிட் கார்டுகளை வழங்கும். இந்த கார்டுகள் மூலமாக, ஒவ்வொரு விவசாயியும் இப்கோ தயாரிப்புகளை வாங்க வசதியாக, 2,500 ரூபாய் அளவுக்கு அதிக பற்று வைத்துக்கொள்ளவும் வசதி செய்து தரப்படும். மேலும் விவசாயிகள் அந்த கடனை செலுத்த, ஒரு மாத கால அவகாசமும் தரப்படும்.இதன் மூலமாக விவசாயிகளுக்கு ஒரு மாத கால அவகாசத்துடன் கூடிய கடன் கிடைப்பதோடு, அவர்கள் ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனைக்கும் எளிதில் மாற முடியும். இப்கோ பரித்துரைக்கும், 2 லட்சம் விவசாயிகளுக்கு கோ பிராண்டட் டெபிட் கார்டுகளை, பேங்க் ஆப் பரோடா வழங்கும். முதற்கட்டமாக உத்தர பிரதேசம், பீஹார், ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநில விவசாயிகளுக்கு இவ்வசதி அளிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)