பதிவு செய்த நாள்
09 பிப்2017
15:43
புதுடில்லி : ஜிஎஸ்டி., வரைவு மாதிரிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக நாட்டின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான பிளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல் ஆகியன கைகோர்க்க முடிவு செய்துள்ளன. மூல வரி வசூல் எனப்படும் டிசிஎஸ் தொடர்பான விதிமுறைகளால் இந்நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்படுவதால், இந்நிறுவனங்கள் ஜிஎஸ்டி.,க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
டிசிஎஸ்.,ன் படி வாடிக்கையாளர்களிடம் இருந்து சேவை மற்றும் சரக்கு வரிகளை வசூலிப்பதற்கு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களே பொறுப்பு. ஆன்லைன் வர்த்தகத்தில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரிகள் உள்ளதால் உரிய நேரத்திற்கு வரிகளை வசூலிப்பது கடினம் என்பதால் ஆன்லைன் நிறுவனங்கள் ஜிஎஸ்டி.,க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இம்மாத இறுதியில் மாதிரி ஜிஎஸ்டி சட்டம் இறுதி செய்யப்பட்டு விடும் என்பதால் இந்நிறுவனங்கள், தற்போதே தங்களின் எதிர்ப்பை காட்ட துவங்கி உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|