பதிவு செய்த நாள்
10 பிப்2017
03:54
மும்பை : இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் தலைவர் பி.சி.பார்தியா கூறியதாவது: ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, பல முனை வரிகளை ஒழித்து, ஒரு முனை வரிக்கு வழி வகுக்கும். இந்த வரி, ஜூலையில் அமலுக்கு வரும் என, தெரிகிறது. இந்த வரி விதிப்பு குறித்து, நாடு முழுவதும், கூட்டமைப்பு சார்பில், 5,000 வர்த்தகர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். அவர்கள் மூலம், பல நிலைகளில் உள்ள வணிகர்களுக்கு, வரி நடைமுறைகள் பயிற்சி பரவலாக்கப்படும்.
வணிகர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, பட்டய கணக்காளர்கள், வரி ஆலோசகர்கள் ஆகியோர் நியமிக்கப்பட உள்ளனர். அடுத்த இரண்டு மாதங்களில், இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இந்த வரி விதிப்பு தொடர்பாக, ஏற்கனவே, 20 கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், 20 பயிற்சி பட்டறைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும், சரக்கு மற்றும் சேவை வரி குறித்து, வணிகர்கள் அறிந்து கொள்ள, இத்திட்டம் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|