நிறு­வ­னர்­க­ளுடன் எந்த பிரச்­னையும் இல்லை: இன்­போசிஸ் அறி­விப்புநிறு­வ­னர்­க­ளுடன் எந்த பிரச்­னையும் இல்லை: இன்­போசிஸ் அறி­விப்பு ... ரிலையன்ஸ் கேபிடல் நிறு­வனம் நிகர லாபம் ரூ.209 கோடி ரிலையன்ஸ் கேபிடல் நிறு­வனம் நிகர லாபம் ரூ.209 கோடி ...
இல்­லத்­த­ர­சி­களின் சேமிப்பை பங்கு சந்தை பக்கம் திருப்ப முயற்சி: ‘செபி’ அதி­ரடி திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2017
00:00

புது­டில்லி : ‘‘வீடு­களில் சேமிக்­கப்­படும் பணத்தை, பங்குச் சந்­தை­களில் முத­லீடு செய்யும் திட்­டத்­திற்­காக, விரைவில், நிதி ஆலோ­சனை குழு அமைக்­கப்­படும்,’’ என, பங்குச் சந்தை கட்­டுப்­பாட்டு வாரி­ய­மான, ‘செபி’யின் தலைவர், யு.கே.சின்ஹா தெரி­வித்து உள்ளார்.
இந்­திய குடும்­பங்­களில், குறிப்­பாக இல்­லத்­த­ர­சி­க­ளிடம், சேமிக்கும் பழக்கம் காலம் கால­மாக இருந்து வரு­கி­றது. வங்­கிகள், நிதி நிறு­வ­னங்கள் போன்­ற­வற்றில் முத­லீடு செய்து, வட்டி வருவாய் ஈட்­டாமல், அவ­சர தேவை­க­ளுக்கு உதவும் என்ற நோக்­கத்தில், வீடு­களில் பணம் சேமிக்­கப்­ப­டு­கி­றது. பலர், வங்கி நடை­மு­றை­க­ளுக்கு அஞ்சி, வீடு­களில் பணத்தை சேமிக்­கின்­றனர். இத்­த­கைய சேமிப்­பு­களை, எளிய நடை­மு­றைகள் மூலம் பங்குச் சந்­தை­க­ளுக்கு ஈர்க்க, ‘செபி’ திட்­ட­மிட்டு உள்­ளது. இதனால், முடங்கிக் கிடக்கும் சேமிப்பு மூலம், குடும்­பங்­களுக்கு வருவாய் கிடைக்கும் என்­ப­துடன், நாட்டின் பொரு­ளா­தா­ரமும், வளர்ச்சி பெறும் என, செபி கரு­து­கி­றது.
இது குறித்து, டில்­லியில் நடை­பெற்ற, 11வது, ‘டிஜிட்டல் இந்­தியா’ மாநாட்டில், யு.கே.சின்ஹா பேசி­ய­தா­வது:குடும்ப சேமிப்­பு­களை, பங்குச் சந்­தை­க­ளுக்கு ஈர்ப்­பதன் மூலம், வீடும், நாடும் வளர்ச்சி பெறும். நாட்டின் பொரு­ளா­தாரம் நன்கு உள்­ளது. பங்குச் சந்­தை­யிலும், கடு­மை­யான கட்­டுப்­பாட்டு நடை­மு­றைகள் அமலில் உள்­ளன. இத்­த­கைய சூழலில், பங்குச் சந்­தை­களில் குடும்ப சேமிப்­பு­களின் பங்­க­ளிப்பு, மிகச் சொற்­ப­மா­கவே உள்­ளதை ஏற்க முடி­யாது. மக்கள், பங்குச் சந்­தை­களில் முத­லீடு செய்ய தயா­ராக உள்­ளனர்; ஆனால், ‘வாடிக்­கை­யா­ளரை அறிந்து கொள்வோம்’ போன்ற சில நடை­முறை சிர­மங்­களால், முத­லீடு செய்ய தயங்­கு­கின்­றனர்.
அதனால், சுல­ப­மான நிதிப் பரி­வர்த்­த­னை­களை மேற்­கொள்ளும் வழி­மு­றைகள் குறித்து ஆராய, விரைவில் ஆலோ­சனை குழு ஒன்று அமைக்­கப்­படும். இக்­கு­ழுவில், நிதி தொழில்­நுட்ப நிறு­வ­னங்­களின் தலை­வர்கள், நிதி வல்­லு­னர்கள் உள்­ளிட்டோர் இடம் பெறுவர். இக்­குழு அளிக்கும் பரிந்­து­ரையின் அடிப்­ப­டையில், இல்ல சேமிப்­பு­களை பங்குச் சந்­தைக்கு ஈர்ப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை, செபி எடுக்கும்.
சொத்து மறு­சீ­ர­மைப்பு நிறு­வ­னங்கள் வெளி­யிடும் பங்கு ரசீ­து­களை, பங்குச் சந்­தை­களில் பட்­டி­ய­லி­டு­வது தொடர்­பான, புதிய விதி­மு­றை­களை உரு­வாக்கும் பணி நடை­பெற்று வரு­கி­றது. வரும் நிதி­யாண்டில், புதிய விதி­மு­றைகள் வெளி­யி­டப்­படும். இந்­தி­யாவில், ‘கிரவுட் பண்டு’ எனப்­படும், கூட்டு நிதி சேக­ரிப்பு மூலம், பொது­மக்­க­ளிடம் பணம் பெற்று, பல்­வேறு திட்­டங்­களை நிறை­வேற்றிக் கொள்­வது அதி­க­ரித்து வரு­கி­றது. இத்­திட்­டத்தை முறைப்­ப­டுத்­து­வ­தற்­கான வரைவு விதி­மு­றை­களை, கருத்து கேட்­புக்­காக, செபி வெளி­யிட்­டது. ஆனால், அதில் கடு­மை­யான கட்­டுப்­பா­டுகள் உள்­ள­தாக, ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்கள் புகார் தெரி­வித்­துள்­ளன. இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)