பதிவு செய்த நாள்
13 பிப்2017
05:10
முதலீட்டாளர்கள், வீடுகளை அமைக்க, முதலீடு செய்ய விரும்பும் நகரங்களில் மும்பை, டில்லி மற்றும் பெங்களூரு ஆகியவை முன்னணியில் உள்ளன.
ரியல் எஸ்டேட் இணையதளமான, மேஜிக்பிரிக்ஸ் தன் வாசகர்கள் மத்தியில், இந்த ஆண்டு, அவர்கள் எந்த நகரில் வீடு வாங்கி முதலீடு செய்ய விரும்புகின்றனர் எனும், கேள்வியுடன் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில் மும்பை, டில்லி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களே முன்னணித் தேர்வாக அமைந்துள்ளன. மற்ற இந்திய நகரங்களை விட, மேற்கண்ட நகரங்களில் வீடு வாங்கி முதலீடு செய்ய விரும்புவதாக, பலரும் தெரிவித்துள்ளனர். இந்த மூன்று நகரங்களுக்குமே, 22 சதவீத வாக்குகளுக்கு மேல் கிடைத்துள்ளன. இந்த நகரங்களில் உள்ள, வேலைவாய்ப்பே இதற்கான பிரதான காரணமாக அமைந்துள்ளது தெரிய வருகிறது.
போக்குவரத்து வசதி, புதிய நிறுவனங்கள், வாடகை வசதி ஆகியவையும் முதலீட்டிற்கான முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன. பொதுவாக, வர்த்தக நிறுவனங்கள் முதலீடு செய்ய விரும்பும் நகரங்களில், இந்த மூன்று நகரங்களும் முன்னணியில் இருப்பதும், குறிப்பிடத்தக்கது. டில்லி அருகே உள்ள, குர்கான் மற்றும் நொய்டா குடியிருப்புகளில், பெரிய அளவில் கவனத்தை ஈர்த்து வருவதாக கருதப்படுகிறது. பெங்களூருவிலும், ஐ.டி., தவிர, ரியல் எஸ்டேட் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|