'ஸ்வைப்பிங்' வசதியுடன் ஏ.டி.எம்., கார்டு தபால் துறை விரைவில் அறிமுகம்'ஸ்வைப்பிங்' வசதியுடன் ஏ.டி.எம்., கார்டு தபால் துறை விரைவில் அறிமுகம் ... பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
8 சத­வீத அரசு சேமிப்பு பத்­தி­ரங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2017
05:11

குறைந்த வட்டி விகித சூழலில், பாது­காப்­பான பலனை விரும்பும் முத­லீட்­டா­ளர்கள் மத்­தியில் 8 சத­வீத அரசு சேமிப்பு பத்­தி­ரங்கள் கவ­னத்தை ஈர்த்து வரு­கின்­றன. குறிப்­பிட்ட வட்டி விகி­தத்தை உறுதி அளிக்கும் இந்த சேமிப்பு பத்­தி­ரங்­களில் முத­லீடு செய்­வது பற்றி ஒரு பார்வை: எட்டு சத­வீத அரசு சேமிப்பு பத்­தி­ரங்கள், 2003ம் ஆண்டு முதன் முதலில் வெளி­யிடப்­பட்­டன. இவற்றின் முதிர்ச்சி காலம் ஆறு ஆண்­டு­க­ளாகும். குறிப்­பிட்ட வினி­யோக அமைப்­புகள் மூலம் இவற்றில் ஆண்டு முழு­வதும் முத­லீடு செய்­யலாம்.
வட்டி விகிதம்இந்த பத்­தி­ரங்­களும் மற்ற அரசு பத்­தி­ரங்கள் போன்­றவை தான். ஆனால், இவை குறிப்­பிட்ட வட்டி விகிதம் கொண்­டவை. வட்டி விகிதம், 8 சத­வீதம் என நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. இதை அரை­யாண்டு அடிப்­ப­டையில் அல்­லது கூட்டு வட்டி முறையில் முதிர்வு காலத்தில் பெற்­றுக்­கொள்­ளலாம். பாரத ஸ்டேட் வங்கி, அதன் துணை வங்­கிகள், தேசி­ய­ம­ய­மாக்­கப்­பட்ட வங்­கிகள், மற்றும் எச்.டி.எப்.சி., – ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி உள்­ளிட்ட சில தனியார் வங்­கிகள் மூலம் இவற்றை வாங்­கலாம். ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்­ப­ரேஷன் மூலமும் வாங்­கலாம். இந்த பத்­தி­ரங்­களை காகித வடிவில் மட்டும் தான் வாங்க முடியும். இவை பங்­குச்­சந்­தையில் பட்­டி­ய­லி­டப்­ப­டு­பவை அல்ல. குறைந்த பட்ச தொகை­யாக, 1,000 ரூபாய் முதல் முத­லீடு செய்­யலாம். ஒரு பத்­தி­ரத்தின் முக மதிப்பு இது. உச்­ச­வ­ரம்பு இல்லை. பத்­திரம் அளிக்கும் வட்டி வரு­மா­னத்­திற்கு அவ­ரவர் வரு­மான வரி வரம்­பிற்கு ஏற்ப வரி உண்டு. மொத்த வட்டி வரு­மானம், 10,000 ரூபாய்க்கு மேல் இருந்தால், டி.டீ.எஸ்., பிடித்தம் செய்­யப்­படும்.
சாதகம், பாதகம் என்ன?தற்­போ­தையை சூழலில் வட்டி விகிதம் குறை­வாக உள்­ளது. இது மேலும் குறை­வ­தற்­கான வாய்ப்பு இருப்­ப­தாக கரு­தப்­ப­டு­கி­றது. சிறு சேமிப்பு மற்றும் வைப்பு நிதி­க­ளுக்­கான வட்டி குறையும் போக்கு காணப்­ப­டு­கி­றது. இதன் கார­ண­மாக இந்த பத்­தி­ரங்கள் அளிக்கும் 8 சத­வீத வட்டி ஈர்ப்­பு­டை­ய­தாக இருக்­கி­றது. எனவே இவை, ஐந்­தாண்டு வைப்பு நிதி, தேசிய சேமிப்பு சான்­றிதழ் ஆகி­ய­வற்றை விட அதிக வட்டி விகிதம் கொண்­டுள்­ளன. அரசு நிர்­ண­யித்த வட்டி விகிதம் இன்­னமும் மாற்­றப்­ப­டாமல் தொடர்­கி­றது. இப்­போது முத­லீடு செய்தால் ஆறு ஆண்­டு­க­ளுக்கு இதே வட்டி விகித பலனை பெறலாம்ஆனால், இந்த பத்­தி­ரங்கள் பங்­குச்­சந்தையில் பட்­டி­ய­லி­டப்­ப­டா­தவை என்­பதால் இவற்றை விற்­ப­தற்­கான சந்தை வாய்ப்பு இல்லை. இந்த பத்­தி­ரத்தை கூட்­டாக வாங்­கலாம் என்­றாலும் இவற்றை இன்­னொ­ரு­வ­ருக்கு மாற்­றித்­தர முடி­யாது. இந்த பத்­தி­ரங்­களை அட­மானம் வைத்து கடன் பெறலாம் என்­றாலும், இந்த வச­தியை அளிக்கும் வங்­கி­களில் மட்­டுமே இது சாத்­தியம்.பத்­தி­ரங்­களை ஆன்லைன் வடிவில் கையாள முடி­யாது. பாது­காப்­பான வரு­மா­னத்தை முதன்­மை­யாக கருதும் முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு இவை ஏற்­ற­தாக இருக்கும் என கரு­தப்­ப­டு­கி­றது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)