‘நாரா­ய­ண­மூர்த்­தி­யுடன் ஆத்­மார்த்த நட்­பு­றவு’: ‘இன்­போசிஸ்’ விஷால் சிக்கா கூறு­கிறார்‘நாரா­ய­ண­மூர்த்­தி­யுடன் ஆத்­மார்த்த நட்­பு­றவு’: ‘இன்­போசிஸ்’ விஷால் ... ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.66.95 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.66.95 ...
‘சைபர்’ பாது­காப்பு காப்­பீட்டில் ஆர்வம் காட்டும் வங்­கிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 பிப்
2017
00:41

மும்பை : வலை­தள பணப் பரி­வர்த்­த­னை­களில் நடை­பெறும் மோச­டி­க­ளுக்கு இழப்­பீடு வழங்கும், ‘சைபர்’ பாது­காப்பு காப்­பீ­டு­களை பெற, வங்­கிகள் அதிக முக்­கி­யத்­துவம் அளிக்கத் துவங்­கி­யுள்­ளன.
கடந்த சில மாதங்­க­ளுக்கு முன், எஸ்.பி.ஐ., – ஐ.சி.ஐ.சி.ஐ., உள்­ளிட்ட வங்­கி­களைச் சேர்ந்த, 32 லட்சம் வாடிக்­கை­யா­ளர்­களின், ‘டெபிட் கார்டு’ தக­வல்­களை, கம்ப்­யூட்டர் நாச­கா­ரர்கள் திரு­டி­ய­தாக அதிர்ச்சி தகவல் வெளி­யா­னது. திரு­டப்­பட்ட தக­வல்கள் மூலம், சீனா உள்­ளிட்ட வெளி­நா­டு­களில் இருந்து, பல வாடிக்­கை­யா­ளர்­களின் வங்கிக் கணக்கில் இருந்த பணம், ‘அபேஸ்’ செய்­யப்­பட்­டது. இதன் கார­ண­மாக, எச்.டி.எப்.சி., – யெஸ் பேங்க், ஆக்சிஸ் பேங்க் உள்­ளிட்ட வங்­கிகள், குறிப்­பிட்ட வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு புதிய டெபிட் கார்டு வழங்­கின. எஸ்.பி.ஐ., தற்­காப்பு நட­வ­டிக்­கை­யாக, 6 லட்சம் டெபிட் கார்­டு­களை முடக்கி, வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு புதிய கார்­டு­களை வழங்­கி­யது.
பேங்க் ஆப் பரோடா, 1 லட்சம் டெபிட் கார்டு விப­ரங்கள் திருடு போன­தாக தெரி­வித்­தி­ருந்­தது. இந்­திய நிதி வர­லாற்றில், முதன்­மு­றை­யாக நடை­பெற்ற இந்த, ‘மெகா’ தகவல் திருட்டைத் தொடர்ந்து, வங்­கிகள், ‘சைபர்’ பாது­காப்பு காப்­பீடு செய்து கொள்­வது அதி­க­ரித்­துள்­ளது. இதற்கு மத்­திய அரசின், மின்­னணு பணப் பரி­வர்த்­தனை ஊக்­கு­விப்பு திட்டம் மேலும் உத்­வேகம் அளித்­துள்­ளது. ‘இதன் கார­ண­மாக, கடந்த இரு ஆண்­டு­க­ளாக, ஆண்­டுக்கு சரா­ச­ரி­யாக, 50 சத­வீத வளர்ச்­சியை கண்டு வந்த சைபர் பாது­காப்பு காப்­பீட்டு துறை, தற்­போது, 100 சத­வீத வளர்ச்­சியை கண்­டுள்­ளது,’’ என, பார்தி ஏ.எக்ஸ்.ஏ., ஜெனரல் இன்­சூரன்ஸ் தலைவர், பரக் குப்தா தெரி­வித்து உள்ளார்.இருந்த போதிலும், சைபர் பாது­காப்பு காப்­பீட்டு சந்­தையின் மதிப்பு, 60 கோடி ரூபாய் என்ற அள­விற்கு, மிகவும் குறை­வா­கவே உள்­ளது.
வங்­கிகள், தங்கள் வலைத­ளங்கள் மூலம் நடை­பெறும் மோச­டி­க­ளுக்கு காப்­பீடு செய்து கொள்­ளவே, அதிகம் அக்­கறை காட்டி வந்­தன. தற்­போது, ‘இ – வாலட்’ போன்ற மின்­னணு பணப் பை நிறு­வ­னங்­களும், வங்­கிகள் வாயி­லான நிதிச் சேவை­களை, அவற்றின் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வழங்கி வரு­கின்­றன. அதனால், இது போன்ற மூன்றாம் நபர் நிறு­வ­னங்கள் வாயி­லான, ‘சைபர்’ மோச­டி­க­ளுக்கும், காப்­பீடு வசதி பெற, வங்­கிகள் ஆர்வம் காட்­டு­கின்­றன. எஸ்.பி.ஐ., அதன், 30 கோடி வாடிக்­கை­யா­ளர்­களின் நலனை கருத்தில் கொண்டு, சைபர் பாது­காப்பு காப்­பீடு பெறு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளது.
பிற வங்­கி­களும், பல­த­ரப்­பட்ட சைபர் காப்­பீட்டு திட்­டங்­களை தேர்வு செய்து வரு­கின்­றன. இதனால், சைபர் காப்­பீ­டு­களை வழங்கும், நியூ இந்­தியா அஷ்­யூரன்ஸ், நேஷனல் இன்­சூரன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., லொம்­பார்டு, டாடா ஏ.ஐ.ஜி., – எச்.டி.எப்.சி., எர்கோ, பஜாஜ் அலையன்ஸ் உள்­ளிட்ட, பொது காப்­பீட்டு நிறு­வ­னங்­களின் பிரீ­மியம் வருவாய், நடப்பு நிதி­யாண்டில் அதி­க­ரித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)