பதிவு செய்த நாள்
23 பிப்2017
20:36
மும்பை : பொது காப்பீட்டு துறையில் ஈடுபடுவதற்கு, இரு நிறுவனங்கள், காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்திடம் விண்ணப்பித்து உள்ளன.
இந்தியாவில், நான்கு பொதுத் துறை நிறுவனங்கள் உட்பட, பல நிறுவனங்கள், பொது காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றன. நடப்பு நிதியாண்டில், ஒன்பது மாதங்களில், பொது காப்பீட்டு துறை, 30 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. ஜன., வரையிலான காலத்தில், பொது காப்பீட்டு துறையின் வியாபாரம், 1.20 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. பொது காப்பீட்டு துறையில் ஈடுபடுவதற்கு, காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும். அந்த வகையில், இரு நிறுவனங்கள், காப்பீட்டில் ஈடுபட, ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளன.
இது குறித்து, ஆணையத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: காப்பீட்டு துறையில் களமிறங்க, இரு நிறுவனங்கள் அனுமதி கேட்டு விண்ணப்பித்து உள்ளன. அதில், ஒரு நிறுவனம், மறு காப்பீட்டு துறையிலும், மற்றொரு நிறுவனம், தனிப்பட்ட சுகாதார காப்பீட்டு துறையிலும் ஈடுபட உள்ளன. அவற்றின் விண்ணப்பங்களை தீவிரமாக ஆய்வு செய்த பின், விரைவில் அனுமதி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|