பதிவு செய்த நாள்
23 பிப்2017
20:37
மும்பை : மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், சர்வதேச தேயிலை, காபி கண்காட்சி நடக்க உள்ளது.
உலகில், தேயிலை, காபி உற்பத்தி மற்றும் பயன்பாட்டில், இந்தியா முன்னணியில் உள்ளது. இந்நிலையில், மும்பையில், ஐந்தாவது சர்வதேச காபி, தேயிலை கண்காட்சி, வரும் நவ., 16ல் இருந்து, 18 வரை நடக்க உள்ளது.
இது குறித்து, கூட்டமைப்பைச் சேர்ந்த, பிரீதி கபாடியா கூறியதாவது: உலகில், காபி, தேயிலை பயன்பாடு, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. வரும், 2021ல், உடனடியாக அருந்தும் பானங்களின் சந்தை மதிப்பு, 15 ஆயிரம் கோடி டாலரை எட்டும் என, தெரிகிறது. தேயிலை, காபிக்கு, இந்தியா முக்கிய சந்தையாக திகழ்கிறது. எனவே, மும்பையில், ஐந்தாவது சர்வதேச காபி, தேயிலை கண்காட்சி, நவ., 16 முதல், 18 வரை நடக்கிறது. அதில், உள்நாடு மற்றும் எட்டு நாடுகளைச் சேர்ந்த, 90க்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. கண்காட்சியில், தேயிலை, காபி உற்பத்திக்கு பயன்படும் நவீன தொழில்நுட்பம், இயந்திரங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்படுவதுடன், அது குறித்து ஆலோசனையும் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|