பதிவு செய்த நாள்
25 பிப்2017
15:42
சாம்சங் கேலக்ஸி நோட் 7 மொபைலை தொடர்ந்து தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 7 பிளஸ் வெடித்துள்ள சம்பவம் அந்நிறுவன பயனாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆப்பிள் வாடிக்கையாளர் இந்த தகவலை டுவிட்டர் மூலம் பதிவு செய்துள்ளார். ஆப்பிள் நிறுவனம் வெடித்த ஸ்மார்ட்போனினை ஆய்வு செய்வதாக தெரிவித்துள்ளது.
பிரியானா ஒலிவாஸ் தனது ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போன் சீராக இயங்கவில்லை என்பதால் ஆப்பிள் ஸ்டோரில் வழங்கியுள்ளார். இவரது ஐபோனினை சோதனை செய்த ஆப்பிள் ஸ்டோர் வல்லுநர்கள் ஸ்மார்ட்போனில் எவ்வித பிரச்சனையும் இல்லை என கூறி திரும்ப வழங்கிவிட்டனர். ஆப்பிள் ஸ்டோரில் இருந்து எடுத்து வந்ததும் சார்ஜரில் வைத்துள்ளார். பின் அந்த போனை அறையில் இருந்த சிறிய மேஜையில் வைத்தள்ளார். சிறிது நேரத்திலேயே அவரது ஸ்மார்ட்போனில் இருந்து அதிக சத்தம் ஏற்பட்டு, பின் தீ பற்றி கொண்டதாக ஒலிவாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டுவிட்டரில் அவர் பதிவு செய்துள்ள வீடியோவில் புத்தம் புதிய ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போனில் இருந்து தீ புகை வெளியேறுவது தெளிவாக படமாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இதுவரை 1.26 மில்லினுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். வெடித்து சிதறிய ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆப்பிள் ஸ்டோரில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், ஆப்பிள் வல்லுநர்கள் இந்த ஸ்மார்ட்போனினை ஆய்வு செய்து வருவதாகவும் ஒலிவாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|