பதிவு செய்த நாள்
28 பிப்2017
02:00
மும்பை: கோத்ரெஜ் குழுமத்தைச் சேர்ந்த, கோத்ரெஜ் இன்டீரியோ, கட்டில், மேஜை உள்ளிட்ட மரச்சாமான்கள் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், அடுத்த மூன்று ஆண்டுகளில், மெத்தை பிரிவின் மூலம், 400 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடிவு செய்துள்ளது. இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி, அனில் மாத்துார் கூறியதாவது:அமைப்பு சார்ந்த நிறுவனங்களின் மெத்தை தயாரிப்பு சந்தை மதிப்பு, 3,000 கோடி ரூபாயாக உள்ளது. இது, ஆண்டு தோறும், 8 – 9 சதவீதம் வளர்ச்சி கண்டு வருகிறது. அதில், எங்கள் நிறுவனத்தின் பங்கு, 5 சதவீதம் என்றளவில் உள்ளது.இது, அடுத்த மூன்று ஆண்டுகளில், இரு மடங்கு அதிகரிக்கும். தற்போது, மெத்தை பிரிவில், எங்கள் நிறுவனத்தின் விற்றுமுதல், 170 கோடி ரூபாயாக உள்ளது. இது, அடுத்த மூன்று ஆண்டுகளில், 400 கோடி ரூபாயாக அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. நடப்பு நிதியாண்டில், எங்கள் நிறுவனத்தின் மொத்த வருவாய், 2,000 கோடி ரூபாயாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|