பதிவு செய்த நாள்
28 பிப்2017
23:45
மும்பை : ஆயுள் காப்பீட்டு வணிகத்தில், எச்.டி.எப்.சி., லைப் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், இ.டி.மணி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம், எச்.டி.எப்.சி., குழும காப்பீட்டு திட்டங்களை, வாடிக்கையாளர்களுக்கு, மொபைல் ஆப் மூலம் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இது குறித்து, எச்.டி.எப்.சி., லைப் நிறுவன அதிகாரி அமிதாப் சவுத்ரி கூறியதாவது: இந்தியாவில், இளைஞர்கள் அதிகளவில் சம்பாதிக்கின்றனர். ஆனால், அவர்கள் அனைவரும், காப்பீடு எடுப்பதில்லை. எனவே, இளைஞர்கள் விரும்பும் வகையில், காகித விண்ணப்பம் இல்லாத வகையில், மொபைல் ஆப் மூலமே தேர்வு கொள்ளும் வகையில், குழு காப்பீட்டு திட்டங்கள் வழங்கப்பட உள்ளன. இந்த ஆப் மூலம் வாடிக்கையாளர்கள், குழும காப்பீட்டு திட்ட விபரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். குழும காப்பீட்டு திட்டம், 25 லட்சம் ரூபாய் முதல், 50 லட்சம் ரூபாய் என்றளவில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|