பதிவு செய்த நாள்
02 மார்2017
17:28
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த இருதினங்களாக நல்ல ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில் இன்றைய வர்த்தகமும் நல்ல ஏற்றத்துடன் ஆரம்பமாகின. அக்டோபர் - டிசம்பர் மாதத்திற்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இருந்தது, ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் போன்றவற்றால் இன்றைய வர்த்தகம் நல்ல உயர்வுடன் ஆரம்பமாகின. சென்செக்ஸ் கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்து 29 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமாகின. ஆனால், அதன்பின்னர் முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ய தொடங்கியதால் வர்த்தகம் சரிவுடன் முடிந்தன.வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 145 புள்ளிகள் சரிந்து 28,840-ஆகவும், நிப்டி 46 புள்ளிகள் சரிந்து 8,899-ஆகவும் முடிந்தன. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 22 நிறுவன பங்குகள் சரிந்தும், 6 நிறுவன பங்குகள் உயர்ந்தும் முடிந்தன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|