பதிவு செய்த நாள்
03 மார்2017
06:02
மும்பை : ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் நிறுவனம், இருசக்கர வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், கடந்த பிப்., மாதத்தில், 3.69 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
இது, முந்தைய ஆண்டின், இதே மாதத்தை விட, 5 சதவீதம் அதிகம். மத்திய அரசு, 2016 நவ., 8ல், செல்லாத நோட்டு அறிவிப்பை வெளியிட்டது. இதனால், சில மாதங்களாக, வாகன விற்பனை பாதிக்கப்பட்டது. தற்போது, இயல்பு நிலை திரும்ப துவங்குவதால், வாகன விற்பனை அதிகரித்து வருகிறது.இதையடுத்து, பிப்., மாதம், ஹோண்டா நிறுவனத்தின் சந்தை பங்கு, 1.4 சதவீதம் உயர்ந்து, 27.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில், ஏப்., – பிப்., வரை, ஹோண்டாவின் வாகன ஏற்றுமதி, 39 சதவீதம் உயர்ந்து, 2.56 லட்சமாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலத்தில், 1.84 லட்சமாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|