பதிவு செய்த நாள்
07 மார்2017
05:19
புதுடில்லி : கோனே இந்தியா நிறுவனம், ‘எலிவேட்டர்’ உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், நடப்பாண்டில், அதிகளவில், புதிய சாதனங்களை அறிமுகம் செய்து, விற்பனையை அதிகரிக்க உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அமித் கோஸெய்ன் கூறியதாவது: இந்தியாவில், ஆண்டுதோறும், எலிவேட்டர், எஸ்கலேட்டர் சாதனங்களின் தேவை, 50 ஆயிரம் என்றளவில் உள்ளது. குறிப்பாக, எஸ்கலேட்டர் விற்பனை மிகவும் குறைவு. அந்த சாதனங்கள் சந்தையில், எங்கள் நிறுவனத்தின் பங்கு, 20 சதவீதம் என்றளவில் உள்ளது. மத்திய அரசின், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட கட்டுமான பணிகள் சரிவடைந்து உள்ளன. இதனால், எலிவேட்டர் விற்பனையும் பாதித்தது.
கடந்த ஆண்டில், எலிவேட்டர், எஸ்கலேட்டர் விற்பனையில், நிறுவனத்தின் வளர்ச்சி, 3 – 4 சதவீதம் மட்டும் இருந்தது. நடப்பாண்டில், புதிய சாதனங்கள் அதிகளவில் அறிமுகம் செய்யப்படும். இதன் மூலம், வளர்ச்சி, 6 சதவீதம் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|