பதிவு செய்த நாள்
08 மார்2017
04:45
சென்னை : கெம்பிளாஸ்ட் சன்மார் நிறுவனம், பி.வி.சி., தொழிலில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, இந்நிறுவனம், பொன் விழா ஆண்டை கொண்டாட உள்ளது. இதையடுத்து, தமிழகத்தில், பல்வேறு திட்டங்களில், 1,050 கோடி ரூபாயை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி, சேலம் மாவட்டம், மேட்டூரில், ‘ஹைட்ரஜன் பெராக்சைடு’ உற்பத்தி ஆலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக, 100 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும்.
இந்நிறுவனம், கெம் ஒன் எஸ்.ஏ.எஸ்., நிறுவனத்துடன் இணைந்து, 350 கோடி ரூபாய் முதலீட்டில், சி.பி.வி.சி., ஆலை அமைக்க உள்ளது. மேலும், தமிழகத்தில் ஆலை விரிவாக்கம் உள்ளிட்ட இரு திட்டங்களுக்கு, 600 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. எதிர் காலத்தில் பங்குச் சந்தை நிலையை பொறுத்து, நிறுவனம் சந்தையில் பட்டியலிடப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும் என, சன்மார் குழும தலைவர், என்.சங்கர் தெரிவித்து உள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|