பதிவு செய்த நாள்
08 மார்2017
04:49
மும்பை : ‘வேளாண் விளைபொருட்கள் உற்பத்தி அதிகரிப்பால், அடுத்த இரு ஆண்டுகளில், விவசாய உரங்களுக்கான தேவைப்பாடு, ஆண்டுக்கு, 3 சதவீதம் அதிகரிக்கும்’ என, எஸ்.பி.ஐ., பொருளாதார ஆய்வு பிரிவின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் விபரம்:விவசாயத் துறை, பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஈடு கொடுக்கும் வகையில், உணவு தானியங்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நிலையில் உள்ளது.
வருவாய்இதையொட்டி, விளைநிலங்களை விவசாயத்திற்கு ஏற்ற வகையில் தயார்படுத்துவது முதல், விளைபொருள் சேமிப்புக் கிடங்குகளை அதிகரித்து, சரக்கு போக்குவரத்துக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துவது வரை, பல கட்ட வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகின்றன.மத்திய பட்ஜெட்டில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், விவசாயிகளின் வருவாயை இரு மடங்கு அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனால், வேளாண் துறை சார்ந்த வளர்ச்சி திட்டங்களை, மத்திய அரசு முடுக்கிவிட்டு உள்ளது.இது போன்ற நடவடிக்கைகளால், வேளாண் சாகுபடி பரப்பு அதிகரிக்கும். அதற்கு ஏற்ப, உரங்களுக்கான தேவையும் உயரும். அடுத்த இரு ஆண்டுகளில், உரங்களுக்கான தேவை, ஆண்டுக்கு, 3 சதவீதம் அதிகரிக்கும்.
தற்போது, உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, உரம் உற்பத்தி செய்யப்படுவது இல்லை; இறக்குமதி மூலமே பூர்த்தி செய்து கொள்ளப்படுகிறது.கடந்த நிதியாண்டில், உரத்திற்கான தேவை, 6.60 கோடி டன் என்றளவில் இருந்தது. ஆனால், 3.70 கோடி டன் உரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.கடந்த, 10 ஆண்டுகளில், உள்நாட்டில் உரம் உற்பத்தி, ஆண்டுக்கு, 1.63 சதவீதம் என்றளவில், மிகக் குறைவாகவே வளர்ச்சி கண்டு வந்துள்ளது.
வெளிநாட்டில்அதே சமயம், இதே காலத்தில் உரம் இறக்குமதி, ஆண்டுக்கு, சராசரியாக, 9 சதவீதம் அதிகரித்துள்ளது.இந்தியாவின் மொத்த உரம் இறக்குமதியில், சீனாவின் பங்களிப்பு, 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. சீனா, கடந்த நிதியாண்டில், இந்தியாவுக்கு, 42 லட்சம் டன் உரம் ஏற்றுமதி செய்துள்ளது. இது, 10 ஆண்டுகளுக்கு முன், 1.55 லட்சம் டன் என்ற அளவிற்கு, மிகக் குறைவாக இருந்தது.சீனா தவிர, ஓமன், ஈரான் ஆகிய நாடுகளில் இருந்தும், உரம் இறக்குமதி செய்யப்படுகிறது.
வளைகுடா நாடுகளில் எரிவாயு விலை குறைவாக உள்ளதால், அங்கு உரம் தயாரித்து, இறக்குமதி செய்வது லாபகரமாக இருக்கும் என, இந்தியா கருதுகிறது.அதனால், வளைகுடா நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் இணைந்து, அங்கு, உரம் தயாரிக்கும் தொழிற்சாலைகளை அமைப்பது குறித்து, இந்திய பொதுத் துறை நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
3வது இடம்இந்தியா, உலகளவில், உரம் உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும், பயன்பாட்டில், இரண்டாவது இடத்திலும் உள்ளது. சீனா, உரம் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில், முதலிடத்தில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|