பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் சில துறைகள் பாதிப்பு: ரிசர்வ் வங்கிபண மதிப்பு நீக்க நடவடிக்கையால் சில துறைகள் பாதிப்பு: ரிசர்வ் வங்கி ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.66.63 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.66.63 ...
உற்பத்தி உயர்வால் உரம் பயன்பாடு 3% அதிகரிக்கும்: எஸ்.பி.ஐ., ஆய்வு பிரிவு மதிப்பீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மார்
2017
04:49

மும்பை : ‘வேளாண் விளை­பொ­ருட்­கள் உற்­பத்தி அதி­க­ரிப்­பால், அடுத்த இரு ஆண்­டு­களில், விவ­சாய உரங்­க­ளுக்­கான தேவைப்­பாடு, ஆண்­டுக்கு, 3 சத­வீ­தம் அதி­க­ரிக்­கும்’ என, எஸ்.பி.ஐ., பொரு­ளா­தார ஆய்வு பிரி­வின் ஆய்­வ­றிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.
அதன் விப­ரம்:விவ­சா­யத் துறை, பெருகி வரும் மக்­கள் தொகைக்கு ஈடு கொடுக்­கும் வகை­யில், உணவு தானி­யங்­கள் உற்­பத்­தியை அதி­க­ரிக்க வேண்­டிய நிலை­யில் உள்­ளது.
வருவாய்இதை­யொட்டி, விளை­நி­லங்­களை விவ­சா­யத்­திற்கு ஏற்ற வகை­யில் தயார்­ப­டுத்­து­வது முதல், விளை­பொ­ருள் சேமிப்­புக் கிடங்­கு­களை அதி­க­ரித்து, சரக்கு போக்­கு­வ­ரத்­துக்கு தேவை­யான வச­தி­களை ஏற்­ப­டுத்­து­வது வரை, பல கட்ட வளர்ச்­சிப்பணி­கள் நடை­பெற்று வரு­கின்றன.மத்­திய பட்­ஜெட்­டில், அடுத்த ஐந்து ஆண்­டு­களில், விவ­சா­யி­களின் வரு­வாயை இரு மடங்கு அதி­க­ரிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­படும் என, தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது. அத­னால், வேளாண் துறை சார்ந்த வளர்ச்சி திட்­டங்­களை, மத்­திய அரசு முடுக்­கி­விட்டு உள்­ளது.இது போன்ற நட­வ­டிக்­கை­க­ளால், வேளாண் சாகு­படி பரப்பு அதி­க­ரிக்­கும். அதற்கு ஏற்ப, உரங்­க­ளுக்­கான தேவை­யும் உய­ரும். அடுத்த இரு ஆண்­டு­களில், உரங்­க­ளுக்­கான தேவை, ஆண்­டுக்கு, 3 சத­வீ­தம் அதி­க­ரிக்­கும்.
தற்­போது, உள்­நாட்டு தேவையை பூர்த்தி செய்­யும் அள­விற்கு, உரம் உற்­பத்தி செய்­யப்­ப­டு­வது இல்லை; இறக்­கு­மதி மூலமே பூர்த்தி செய்து கொள்­ளப்­ப­டு­கிறது.கடந்த நிதி­யாண்­டில், உரத்­திற்­கான தேவை, 6.60 கோடி டன் என்­ற­ள­வில் இருந்­தது. ஆனால், 3.70 கோடி டன் உரம் மட்­டுமே உற்­பத்தி செய்­யப்­பட்­டது.கடந்த, 10 ஆண்­டு­களில், உள்­நாட்­டில் உரம் உற்­பத்தி, ஆண்­டுக்கு, 1.63 சத­வீ­தம் என்­ற­ள­வில், மிகக் குறை­வா­கவே வளர்ச்சி கண்டு வந்­துள்­ளது.
வெளிநாட்டில்அதே சம­யம், இதே காலத்­தில் உரம் இறக்­கு­மதி, ஆண்­டுக்கு, சரா­ச­ரி­யாக, 9 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ளது.இந்­தி­யா­வின் மொத்த உரம் இறக்­கு­ம­தி­யில், சீனா­வின் பங்­க­ளிப்பு, 50 சத­வீ­தத்­திற்­கும் அதி­க­மாக உள்­ளது. சீனா, கடந்த நிதி­யாண்­டில், இந்­தி­யா­வுக்கு, 42 லட்­சம் டன் உரம் ஏற்­று­மதி செய்­துள்­ளது. இது, 10 ஆண்­டு­க­ளுக்கு முன், 1.55 லட்­சம் டன் என்ற அள­விற்கு, மிகக் குறை­வாக இருந்­தது.சீனா தவிர, ஓமன், ஈரான் ஆகிய நாடு­களில் இருந்­தும், உரம் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கிறது.
வளை­குடா நாடு­களில் எரி­வாயு விலை குறை­வாக உள்­ள­தால், அங்கு உரம் தயா­ரித்து, இறக்­கு­மதி செய்­வது லாப­க­ர­மாக இருக்­கும் என, இந்­தியா கரு­து­கிறது.அத­னால், வளை­குடா நாடு­க­ளைச் சேர்ந்த நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து, அங்கு, உரம் தயா­ரிக்­கும் தொழிற்­சா­லை­களை அமைப்­பது குறித்து, இந்­திய பொதுத் துறை நிறு­வ­னங்­கள் ஆய்வு செய்து வரு­கின்றன.இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.
3வது இடம்இந்­தியா, உல­க­ள­வில், உரம் உற்­பத்­தி­யில் மூன்­றா­வது இடத்­தி­லும், பயன்­பாட்­டில், இரண்­டா­வது இடத்­தி­லும் உள்­ளது. சீனா, உரம் உற்­பத்தி மற்­றும் பயன்­பாட்­டில், முத­லி­டத்­தில் உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)