பதிவு செய்த நாள்
08 மார்2017
04:48
புதுடில்லி : ‘‘பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்பு, ஒருசில துறைகளில், நடப்பு ஜன., – மார்ச் வரையிலான காலாண்டிலும் நீடிக்க வாய்ப்பு உள்ளது,’’ என, ரிசர்வ் வங்கி துணை கவர்னர் விரால் வி.ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
அவர், மேலும் கூறியதாவது: மத்திய அரசு, 2016 நவ., 8ல், உயர் மதிப்பு கரன்சிகளை செல்லாது என, அறிவித்தது. இதை தொடர்ந்து, நாட்டில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இப்பிரச்னையால், ஒருவரின் சொத்து குறையாதபட்சத்தில், பாதிப்பு தற்காலிகமானது தான் என, கூறலாம். அதற்காக, பண மதிப்பு நீக்கத்தால், ஒருசில துறைகளில் கடுமையான தாக்கம் ஏற்படவில்லை எனவும் கூற முடியாது. அது, ஒரு தற்காலிக தாக்கம் எனலாம். இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட ஓரிரு துறைகள், பாதிப்பில் இருந்து மெதுவாக மீண்டு வருகின்றன. இது, நடப்பு காலாண்டு வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது.
அதே சமயம், அமைப்பு சாரா துறையினரை, அமைப்பு சார்ந்த துறைக்கு மாற்ற, பண மதிப்பு நீக்க நடவடிக்கை துணை புரிந்துள்ளது.பணத் தட்டுப்பாட்டை போக்க, தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த, இரண்டு அல்லது மூன்று மாதங்களில், நாட்டில், முழு அளவில் பணப்புழக்கம் இருக்கும். அதே சமயம், முன் இருந்ததை விட, சற்று குறைவாக இருக்கும்.பொதுத் துறை வங்கிகள், அவற்றின் வாராக்கடன்களை சீரமைத்து, சொத்து மதிப்பு அறிக்கையை வழங்க வேண்டும் என, 2015 டிசம்பரில், ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. அதற்கான, ‘கெடு’ இம்மாத இறுதியுடன் முடிவடைகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|