வங்கி கணக்கில் இருப்பு குறை­வுக்கு அப­ராதம்: எஸ்.பி.ஐ., மறு­ப­ரி­சீ­லனை?வங்கி கணக்கில் இருப்பு குறை­வுக்கு அப­ராதம்: எஸ்.பி.ஐ., மறு­ப­ரி­சீ­லனை? ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.66.67 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.66.67 ...
அடுத்த 2 – 3 ஆண்­டு­களில்... நுகர்­பொருள் துறையின் வளர்ச்சி 15% அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2017
23:59

மும்பை : ‘மந்த கதியில் உள்ள இந்­திய நுகர்­பொருள் துறை, அடுத்த, 2 – 3 ஆண்­டு­களில், 15 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மாக வளர்ச்சி காண வாய்ப்பு உள்­ளது’ என, சி.ஐ.ஐ., – பெய்ன் அண்ட் கம்­பெனி இணைந்து வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்­கையில் கூறப்­பட்டு உள்­ளது.
அதன் விபரம்: கடந்த மூன்று ஆண்­டு ­க­ளாக, சோப்பு, டிடெர்ஜென்ட், ஷாம்பூ போன்­ற­வற்றை உள்­ள­டக்­கிய, நுகர்­பொருள் துறையின் வளர்ச்சி மந்­த­மாக உள்­ளது. மொத்த உள்­நாட்டு உற்­பத்தி அடிப்­ப­டை­யி­லான, நுகர்­பொருள் துறையின் வளர்ச்சி, 1.2 சத­வீ­தத்தில் இருந்து, 0.8 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது.
சுணக்கம்இதற்கு, நுகர்­வோரின் செல­வ­ழிப்பு வரு­வாயில் ஏற்­பட்ட மாற்றம் கார­ணமா அல்­லது மக்கள், நுகர்­பொருள் சாரா பொருட்­க­ளுக்கு அதிகம் செல­வ­ழிக்கத் துவங்­கி­யுள்­ளதால், இந்த சுணக்கம் உண்­டா­னதா என, தெரி­ய­வில்லை. இத்­த­கைய சூழல் கார­ண­மாக, நுகர்­பொருள் நிறு­வ­னங்கள், வளர்ச்­சிக்­கான முத­லீ­டு­களை குறைத்துக் கொண்­டன. அவை, லாபத்தை தக்க வைத்துக் கொள்ளும் நோக்­குடன் செயல்­பட்டு வரு­கின்­றன. அதன் விளை­வாக, 2016ல், முந்­தைய இரு ஆண்­டு­களில் இல்­லாத வகையில், நுகர்­பொருள் துறையின் வளர்ச்சி இருந்­தது. இத்­து­றையின், 22 பிரி­வு­களில், 18 பிரி­வு­களில் வளர்ச்சி காணப்­பட்­டது. ஒட்­டு­மொத்த அளவில், அக்­டோபர் வரை, 9 சத­வீத வளர்ச்­சியை, இத்­துறை கண்­டது.
குறிப்­பாக, நக­ரங்­களை விட, 1.7 மடங்கு வளர்ச்சி, கிரா­மப்­புற வணி­கத்தில் கிடைத்­தது. இதற்கு, பற்­பசை, கேச பரா­ம­ரிப்பு எண்ணெய் ஆகிய இரு பிரி­வு­களில், அளவு அடிப்­ப­டை­யி­லான விற்­பனை வளர்ச்சி, குறிப்­பி­டத்­தக்க பங்கை வழங்­கி­உள்­ளது. நகர்ப்­பு­றங்­களில், நொறுக்குத் தீனி உள்­ளிட்ட உணவுப் பொருட்கள் பிரிவு, 10 சத­வீத வளர்ச்­சியை கண்­டுள்­ளது. சிறிய நக­ரங்கள் மற்றும் கிரா­மப்­புற மக்­களின் ஆத­ரவால், வீட்டு பரா­ம­ரிப்பு பொருட்கள் பிரிவின் வளர்ச்சி, 9 சத­வீ­த­மாக உள்­ளது.
ஆற்றல்நுகர்­பொருள் நிறு­வ­னங்கள், அவற்றின், ‘பிராண்டு’ பொருட்­க­ளுக்­கான சந்­தையை விரி­வு­ ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். அவ்­வாறு செய்யும் பட்­சத்தில், அடுத்த, 5 – 10 ஆண்­டு­களில், ஒட்­டு­ மொத்த நுகர்­பொருள் துறையின் வளர்ச்சி சிறப்­பாக இருக்கும். அடுத்த மூன்று ஆண்­டு­களில், மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியின் வளர்ச்சி விகிதம், குறைந்­த­பட்சம், 12 சத­வீ­த­மாக இருந்தால் கூட, நுகர்­பொருள் துறையின் வளர்ச்சி, 15 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மாக உயரும். இத்து­றைக்கு, அதற்­கான ஆற்றல் உள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)