பதிவு செய்த நாள்
10 மார்2017
10:30
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் கடைசிநாளில் உயர்வுடன் ஆரம்பமாகியுள்ளன. நடந்து முடிந்து ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் உ.பி., மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் பா.ஜ., அதிக இடங்களை பெறும் என தேர்தலுக்கு பிந்ததைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அதன்மீதான எதிர்பார்ப்பில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகியுள்ளன.இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(மார்ச் 10-ம் தேதி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 146.50 புள்ளிகள் உயர்ந்து 29,076.63-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 48.70 புள்ளிகள் உயர்ந்து 8,975.70-ஆகவும் இருந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றமும், முன்னணி நிறுவன பங்குகள் ஏற்றத்துடன் காணப்படுவதும் பங்குச்சந்தைகள் உயர காரணமாகியுள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|