பதிவு செய்த நாள்
10 மார்2017
23:41
மும்பை : இண்டஸ்இண்ட் வங்கி, நுண் கடன் துறையில் உள்ள, பாரத் பைனான்சியல் இன்க்ளுஷன் நிறுவனத்தை கையகப்படுத்த உள்ளது.
‘இது தொடர்பாகவும், மேலும் பல நிறுவனங்களின் இணைப்பு குறித்தும் பேச்சு நடைபெற்று வருகிறது. எனினும், இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை’ என, இண்டஸ் இண்ட் வங்கி தெரிவித்துள்ளது. நுண் கடன் சேவையில் ஈடுபட்டு வந்த எஸ்.கே.எஸ்., மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம், தற்போது, பாரத் பைனான்சியல் இன்க்ளுஷன் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.
இணைப்பு நடவடிக்கை வெற்றிகரமாக நடைபெற்றால், பாரத் பைனான்சியல் இன்க்ளுஷன் நிறுவனத்தின், 10 பங்குகளுக்கு, இண்டஸ்இண்ட் வங்கியின், 7 பங்குகள் வீதம், முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் என, தகவல் வெளியாகியுள்ளது. இண்டஸ்இண்ட் வங்கி, ஏற்கனவே, டைய்ச்சூ வங்கியின் கிரெடிட் கார்டு பிரிவு, ஆர்.பி.எஸ்., வங்கியின் வைர நிதியுதவி பிரிவு ஆகியவற்றை, கையகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|