பதிவு செய்த நாள்
10 மார்2017
23:42
புதுடில்லி : இந்தியாவில், மொபைல் போன், டேப்லெட் சாதனங்கள் விற்பனையில், மைக்ரோமேக்ஸ் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம், தன் மொபைல் போன்களின் பாதுகாப்புக்காக, இன்டெல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இது குறித்து, மைக்ரோமேக்ஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சர்வதேச அளவில், ஸ்மார்ட் போன்கள் அதிகம் விற்பனையாகும் நாடுகளின் பட்டியலில், இந்தியா முன்னணியில் உள்ளது. கடந்த ஆண்டில், நாட்டில், 10.91 கோடி ஸ்மார்ட் போன்கள் விற்பனையானதாக, ஓர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில், சாம்சங், லெனோவோ நிறுவனங்களுக்கு அடுத்த இடத்தில், மைக்ரோமேக்ஸ் உள்ளது.தற்போதைய டிஜிட்டல் உலகத்தில், தங்களின் மொபைல் போனில் உள்ள விபரங்கள் பாதுகாப்பாக இருக்க, வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர். அதை பூர்த்தி செய்யும் வகையில், எங்கள் நிறுவனம், மொபைல் போன்களின் மென்பொருள் விபரங்களை பாதுகாக்க, இன்டெல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|