பதிவு செய்த நாள்
12 மார்2017
00:28
மும்பை: தனியார் துறையைச் சேர்ந்த யெஸ் பேங்க், இந்தியாவில் வங்கி சேவையில் ஈடுபட்டு வருகிறது. மத்திய அரசு, நாடு முழுவதும், 100 நகரங்களை, ‘ஸ்மார்ட் சிட்டி’யாக மாற்ற திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இந்நகரங்கள், தொலை தொடர்பு மற்றும் இணையதள சேவைகள் மூலம் மேம்படுத்தப்பட உள்ளன. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர்; மஹாராஷ்டிரா, நாசிக்; புதுச்சேரி ஆகிய மூன்று நகரங்களில், ஸ்மார்ட் திட்டத்திற்காக, யெஸ் பேங்க் ஒப்பந்தம் செய்துள்ளது.இது குறித்து, யெஸ் பேங்க் அதிகாரி ரித்தேஷ் பாய் கூறியதாவது:எங்கள் வங்கி, ஸ்மார்ட் சிட்டி நகரங்களில், பணப் பரிவர்த்தனை தொடர்பான சேவைகளை வழங்க உள்ளது. உதய்பூர், புதுச்சேரி, நாசிக் ஆகிய நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. அந்நகரங்களில், யெஸ் பேங்க், பணப் பரிவர்த்தனை சேவைகளை வழங்கும். இதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை கிடைப்பதுடன், வங்கிக்கும் அதிகளவில் வருவாய் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|