பதிவு செய்த நாள்
16 மார்2017
10:00
மும்பை : ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் இன்று (மார்ச் 16) நடைபெற உள்ளது. இதில், மாநில ஜிஎஸ்டி சட்ட மசோதா மற்றும் யூனியன் பிரதேச ஜிஎஸ்டி சட்ட மசோதா ஆகிய 2 முக்கிய மசோதாக்கள் ஒப்புதலாக உள்ளன. இவ்விரு சட்ட மசோதாக்களுக்கும் ஒப்புதல் கிடைத்த உடன் ஏற்கனவே அறிவித்தபடி ஜூலை 1 ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கும்.
இதனால் இன்றைய ஜிஎஸ்டி கூட்டத்தை கருத்தில் கொண்டு பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. இதன் காரணமாக முன்பு ஏற்போதும் இல்லாத அளவிற்கு நிப்டி அதிரடியாக 9100 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின்போது (மார்ச் 16, காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 156.94 புள்ளிகள் உயர்ந்து 29,555.05 புள்ளிகளாகவும், நிப்டி 53.90 புள்ளிகள் உயர்ந்து 9138.70 புள்ளிகளாகவும் உள்ளன. அதானி போர்ட்ஸ், ஓஎன்ஜிசி, ஹிண்டல்கோ, ஹச்சிஎல் டெக்னாலஜிஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடனும், ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|