பதிவு செய்த நாள்
23 மார்2017
06:28
புதுடில்லி: ஹட்கோ நிறுவனத்தின், பங்கு வெளியீட்டுக்கு, ‘செபி’ அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களில், தன் வசம் உள்ள பங்குகளை வெளியிட்டு, 56 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. பொதுத்துறையைச் சேர்ந்த ஹட்கோ, வீட்டு வசதி திட்டங்களுக்கு, கடன் வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின், 100 சதவீத பங்குகளை, மத்திய அரசு கொண்டுள்ளது. ஹட்கோ, பங்குச் சந்தையில், பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்ட ஒப்புதல் கேட்டு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபியிடம், கடந்த ஜன., மாதம், வரைவு அறிக்கையை தாக்கல் செய்தது. தற்போது, ஹட்கோ பங்கு வெளியீட்டுக்கு, செபி ஒப்புதல் அளித்துள்ளது.இதுகுறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நிறுவனத்தின் செலுத்திய மூலதனம், 2016 மார்ச் வரை, 2,001 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. மத்திய அரசு, 10 சதவீத பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்ட உள்ளது. இதற்கு, செபி ஒப்புதல் அளித்துள்ளதால், விரைவில், பங்கு வெளியீட்டு பணிகள் துவங்கப்படும். ஐ.டி.பி.ஐ., கேப்பிட்டல், நொமுரா பைனான்சியல் அட்வைசரி, எஸ்.பி.ஐ., கேப்பிட்டல், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ் ஆகியவை, பங்கு வெளியீட்டுக்கான மேலாண்மை பணிகளை மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|