பதிவு செய்த நாள்
24 மார்2017
15:15
புதுடில்லி : கறுப்பு பணம் வைத்திருப்போர் அது தொடர்பான தகவலை தானே முன்வந்து அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் பின்னர் வருத்தப்பட நேரிடும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
கவுன்டவுன் துவங்கியது : நாடு முழுவதிலும் உள்ள முன்னணி பத்திரிக்கைகளில் வருமான வரித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கவுன்டவுன் துவங்கி விட்டது. கறுப்பு பணம் வைத்திருப்போர் தங்களின் சட்டவிரோத டெபாசிட்கள் பற்றிய தகவலை 'பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா' வின் கீழ் மார்ச் 31ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். அப்படி தகவல் அளிக்காவிட்டால் பின்நாளில் வருத்தப்பட வேண்டி இருக்கும்.
உங்களின் கறுப்பு பணம் டெபாசிட் குறித்த விபரங்கள் வருமான வரித்துறையிடம் உள்ளது. கறுப்பு பணம் வைத்திருப்போர் அளிக்கும் சொத்து மற்றும் முதலீடு விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும். பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா மூலம் கறுப்பு பணம் விபரங்களை அளிப்பவர்களிடம் 49.9 சதவீதம் வருமான வரி மட்டும் வசூலிக்கப்பட்டும். அப்படி தகவல் ஒப்படைக்காதவர்களிடம் இருந்து வருமான வரியுடன், 77.25 சதவீதம் அபராதமும் வசூலிக்கப்படும்.
சோதனையின் போது கறுப்பு பணம் மற்றும் சொத்துக்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் 83.25 சதவீதம் முதல் 137.25 சதவீதம் வரை அபராதமும், வரியும் வசூலிக்கப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கறுப்பு பணம் முதலைகளுக்கு அரசு மார்ச் 31 வரை இறுதி கெடு விதித்திருப்பது தெளிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|