பதிவு செய்த நாள்
30 மார்2017
10:45
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து உயர்வுடன் காணப்படுகின்றன. கடந்த இரண்டு தினங்களாக நல்ல ஏற்றத்தை கண்டு வந்த பங்குச்சந்தைகள் இன்றும் அதன் ஏற்றத்தை தொடர்கின்றன. குறிப்பாக ஜிஎஸ்டி., மசோதாவிற்கு லோக்சபாவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும், ரூபாயின் மதிப்பு கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்ததாலும் இந்திய பங்குச்சந்தைகள் நல்ல உயர்வுடன் காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 63.41 புள்ளிகள் உயர்ந்து 29,594.84-ஆகவும், நிப்டி 10.70 புள்ளிகள் உயர்ந்து 9,154.50-ஆகவும் வர்த்தகமானது. தொடர்ந்து காலை 10.30 மணியளவில் சென்செக்ஸ் 90 புள்ளிகளும், நிப்டி 20 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகமாகின.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|