பதிவு செய்த நாள்
31 மார்2017
00:39
புதுடில்லி : பொதுத் துறையை சேர்ந்த செயில் நிறுவனம், உருக்கு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின், விஸ்வேஸ்வரய்யா உருக்கு ஆலை மற்றும் சேலம் உருக்காலைகள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இருப்பினும், இந்நிறுவனம், ஆலைகளை நவீனப்படுத்தும் மற்றும் விரிவாக்க திட்டங்களுக்காக, 2,600 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
இது குறித்து, மத்திய உருக்கு துறை இணையமைச்சர் விஷ்ணு தியோ சாய் கூறியதாவது: கடந்த, 10 ஆண்டுகளாக, விஸ்வேஸ்வரய்யா ஆலையும்; ஐந்து ஆண்டுகளாக, சேலம் உருக்காலையும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. மத்திய அரசு, சேலம் உருக்காலை, விஸ்வேஸ்வரய்யா ஆலை, துர்காபூரில் உள்ள அலாய் ஸ்டீல் உருக்காலை ஆகியவற்றின் பங்குகளை விற்க, கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியுள்ளது. செயில் நிறுவனம், அதன் பிலாய் ஆலை உட்பட, ஐந்து முக்கிய ஆலைகளை நவீனப்படுத்த திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|