பதிவு செய்த நாள்
31 மார்2017
16:05
ஐதராபாத் : இந்தியா முழுவதும் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் இன்டர்நெட் வேகம் நொடிக்கு 2.5 எம்பியாக (2.5 Mbps) உள்ளது. இந்நிலையில், பெங்களூருவை சேர்ந்த இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனமான ஆக்ட் ஃபைபர்நெட் (ACT Fibernet) நொடிக்கு 1 ஜிபி (1Gbps) வரை இன்டர்நெட் வேகம் வழங்குவதாக அறிவித்துள்ளது.
அதன்படி ஐதராபாத் நகரில் பிராட்பேண்ட் சேவைகளின் மூலம் நொடிக்கு 1 ஜிபி என்ற வேகத்தில் இன்டர்நெட் வழங்குவதாக அறிவித்துள்ளது. சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஐதராபாத்தில் இதற்கான பணிகள் ஒரு ஆண்டிற்கும் மேலாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஐதராபாத் நகரில் 1 ஜிபி திட்டம் ஒரு மாதத்திற்கு ரூ.5,999 என்ற விலையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ராமா ராவ் இந்த திட்டத்தை துவங்கி வைத்தார்.
தெலுங்கானாவில் முதற்கட்டமாக துவங்கப்பட்டுள்ள 1 ஜிபி திட்டம், அதிகளவு இன்டர்நெட் பயன்பாட்டு வழிமுறைகளை முற்றிலுமாக மாற்றியமைக்கும் என்றும், தெலுங்கானாவின் 23 மில்லியன் மக்களுக்கும் இன்டர்நெட் வழங்கும் இம்மாநில அரசாங்கத்தின் இலக்கை அடைய பயனுள்ளதாக இருக்கும் என ஆக்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பாலா மல்லாடி தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|